.

Pages

Saturday, June 30, 2018

துபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் சேவை தொடக்கம் ~ பஸ் நிறுத்துமிடங்கள்(முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
துபை - ஷார்ஜா இடையே புதிய தடத்தில் 30 நிமிடங்களில் செல்லும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

துபை - ஷார்ஜா இடையேயான பயணம் என்பது உலகின் மிக நெரிசலான பயணங்களில் ஒன்றாகும். சிறிய வாகனங்களில் செல்வதால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் இப்புதிய தடத்தில் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷார்ஜாவை ஒட்டிச் செல்லும் மெட்ரோ சேவையால் பெருமளவு சிறியரக வாகனப் பயன்பாடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

E311 என பெயரிடப்பட்டுள்ள புதிய துபை - ஷார்ஜா தடத்தின் சேவை ராஷிதியா மெட்ரோ நிலையத்தில் இருந்து துவங்கி ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு வழியாக ஷார்ஜாவின் அல் ஜூபைல் பஸ் நிலையத்தை சென்றடையும், அதேபோல் மறுபுறமும் சேவை நடைபெறும் என துபை போக்குவரத்து துறை (RTA) தெரிவித்துள்ளது.

இடைவரும் நிறுத்தங்கள்:
1. நேஷனல் பெயிண்ட்ஸ் (இன்டஸ்ட்ரியல் ஏரியா)
2. மலீஹா ரோடு இன்டஸ்ட்ரியல் ஏரியா இன்டர் சென்ஷன் மற்றும் மலீஹா ரோடு ஸபா இன்டஸ்ட்ரீஸ்
3. மலீஹா ரோடு GEGO மினார்வா
4. மலீஹா ரோடு முனிஸிபாலிட்டி ஆபீஸ்
5. மலீஹா ரோடு 2nd இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன் - பி1
6. மலீஹா ரோடு 2nd இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன் - ஏ1
7. மலீஹா ரோடு J&B இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன்
8. மலீஹா ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன் - பி1
9. மலீஹா ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன் - ஏ1
10. கிங் பைசல் ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன்
11. கிங் பைசல் ரோடு பிரிட்ஜ் (மேம்பாலம்)
12. கிங் பைசல் ரோடு ஜம்போ (சோனி)
13. கிங் பைசல் ரோடு அட்னாக் பெட்ரோல் நிலையம்
14. கிங் பைசல் ரோடு கோல்டு சூக் (OLD)

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.