அதிராம்பட்டினம், ஜூன் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சார்கான் பேரூர் நிர்வாக உதவி அலுவலர் சுப்பையனிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, புதுத்தெரு மிஸ்கீன் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் எஸ்.என் அகமது ஜலீல், எஸ்.எம்.ஆர் முகமது பாருக், எஸ். அப்துல் ஜப்பார், ஏ.எம் அயூப்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை இந்தியன் மளிகை கடை தொடங்கி, புதுத்தெரு மிஷ்கின் பள்ளிவாசல் வழியாக ஜாவியா சாலை வரையிலான சாலை மற்றும் புதுத்தெருவில் இருந்து கடைத்தெரு கிராணி மளிகை கடை வரை செல்லும் சாலை ஆகியவை, பல ஆண்டுகளாக சீரமைக்கமால் குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிரை பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைத்துத்தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகள் அடங்கியதாகும்.
இதில், 11-வது வார்டு புதுத்தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளை கொண்டவை. இந்த வார்டில் நானும், இரண்டு முறை எனது மனைவி பேரூராட்சி உறுப்பினர்களாக பொதுநல பணியாற்றி இருக்கிறோம்.
இந்நிலையில், இந்த வார்டில் புதுத்தெரு தென்புறம் உள்ள சாலையிலிருந்து, ஜாவியா சாலை, கிராணி மளிகை (மார்க்கெட்) சாலை வரை தார் சாலை அமைத்துத்தருவதற்கு எத்தனையோ முறை மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லை. இதைப் பற்றி நிர்வாக அதிகாரியிடமும், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களிடமும், எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கூறி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசியல் காழ்ப்புணர்வுகளால் இந்த வார்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முயற்சியுடையார், இகழ்ச்சி அடையார் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல இந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரான நான், எனது வார்டில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு இந்த வார்டில் பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்துத் தரவேண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் இன்று வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் பணிக்கு வராததால், பேருராட்சி நிர்வாக உதவி அலுவலர் (A.1) சுப்பையனிடம் எனது கோரிக்கை மனுவை அளித்தேன். இம்மனு மீது பேரூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சார்கான் பேரூர் நிர்வாக உதவி அலுவலர் சுப்பையனிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, புதுத்தெரு மிஸ்கீன் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் எஸ்.என் அகமது ஜலீல், எஸ்.எம்.ஆர் முகமது பாருக், எஸ். அப்துல் ஜப்பார், ஏ.எம் அயூப்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை இந்தியன் மளிகை கடை தொடங்கி, புதுத்தெரு மிஷ்கின் பள்ளிவாசல் வழியாக ஜாவியா சாலை வரையிலான சாலை மற்றும் புதுத்தெருவில் இருந்து கடைத்தெரு கிராணி மளிகை கடை வரை செல்லும் சாலை ஆகியவை, பல ஆண்டுகளாக சீரமைக்கமால் குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிரை பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைத்துத்தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகள் அடங்கியதாகும்.
இதில், 11-வது வார்டு புதுத்தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளை கொண்டவை. இந்த வார்டில் நானும், இரண்டு முறை எனது மனைவி பேரூராட்சி உறுப்பினர்களாக பொதுநல பணியாற்றி இருக்கிறோம்.
இந்நிலையில், இந்த வார்டில் புதுத்தெரு தென்புறம் உள்ள சாலையிலிருந்து, ஜாவியா சாலை, கிராணி மளிகை (மார்க்கெட்) சாலை வரை தார் சாலை அமைத்துத்தருவதற்கு எத்தனையோ முறை மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லை. இதைப் பற்றி நிர்வாக அதிகாரியிடமும், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களிடமும், எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கூறி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசியல் காழ்ப்புணர்வுகளால் இந்த வார்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முயற்சியுடையார், இகழ்ச்சி அடையார் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல இந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரான நான், எனது வார்டில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு இந்த வார்டில் பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்துத் தரவேண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் இன்று வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் பணிக்கு வராததால், பேருராட்சி நிர்வாக உதவி அலுவலர் (A.1) சுப்பையனிடம் எனது கோரிக்கை மனுவை அளித்தேன். இம்மனு மீது பேரூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.