.

Pages

Sunday, June 24, 2018

திருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய முனையம் ~ டெண்டர் வெளியீடு!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் ரூ.622 கோடியில் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான சர்வதேச அளவில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 920 கோடியில் புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் தயாரித்து அளித்தது. இதற்கு கடந்தாண்டு அக்டோபர் மாதமே இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. எனினும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், விமான நிலையத்தின் புதிய முனைய பணிகளை முதல் கட்டமாக ரூ. 621.98 கோடியில் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் முடிவு செய்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பு கடந்த 21 ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் திருச்சி  விமான நிலைய பிரமாண்ட புதிய முனையம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்; 
புதிய முனையம் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக கட்டிடங்கள், சாலை, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிகல் உள்ளிட்ட பணிகள் ரூ.621.98 கோடியில் துவங்க உள்ளது. ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். அதன்பின்னர் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.