யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள அல் ஹஸா நகரம்
பேரீத்த மர தோட்டங்களால் சூழப்பட்ட உலகின் மிகப்பெரும் பாலைவனச் சோலை நகராகவும், வேட்டைக் களமாகவும், முதலாம் உலகப்போரின் கல்லறைகளுடனும் திகழும் அல் அஹ்ஸா நகரம் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் அதன் வரலாற்றுச் சிறப்புகளைப் போற்றும் வகையில் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படவுள்ளது.
அல் அஹ்ஸா எனப்படும் அல் ஹஸா நகரம் முன்பு பஹ்ரைன் என்றும் பின்பு ஹஜர் என்று அழைக்கப்பட்டது. இதன் பாலைவனச் சோலை 379 கி.மீ சுற்றளவிற்கு பரவியுள்ளதுடன் சுமார் 1.3 மில்லியன் மக்களும் இங்கு வாழ்கின்றனர். பண்டைய கால வியாபார வழித்தடமாக விளங்கியதுடன் தற்போதும் அண்டை வளைகுடா நாடுகளையும் இந்திய துணைக்கண்டத்தையும் இணைக்கும் முக்கிய துறைமுக நகராகவும் அரேபியன் வளைகுடாவை பிற உலகநாடுகளுடன் இணைக்கும் நுழைவாயிலாகவும் விளங்குகின்றது.
மனித குடியேற்றங்கள் முதன்முதலாக அமைந்த வளைகுடா பிரதேசங்களில் அல் ஹஸா நகரும் ஒன்று என வரலாற்றாளர்களால் கணிக்கப்படுகிறது. (it is now categorized as one of the oldest human settlements in the Arabian Peninsula).
அல் அஹ்ஸாவில் காணப்படும் நாகரீகம் லேவண்ட் (சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், சிப்ரஸ், இராக், லெபனான், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பகுதிகள், துருக்கியின் ஒரு சில பகுதிகள்) எகிப்து மற்றும் மெஸப்படோமியாவிலும் (இராக், குவைத் மற்றும் சவுதியின் வட பகுதிகள்) காணப்பட்டன. ஏமனையும் இராக்கையும் இணைக்கும் பாலைவன வழித்தடத்தில் அமைந்துள்ளதுடன் இங்குள்ள அல் உகைர் துறைமுகம் வளைகுடா நாடுகளை பண்டைய காலம் முதல் கடல்வழியாகவும் இணைக்கின்றது.
உலகின் இயற்கையான விவசாய பாலைவனச் சோலையாக (one of the largest natural agricultural oasis in the world) வர்ணிக்கப்படும் இங்கு 10,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலத்தில் பல்வேறு ரகங்களில் பேரீத்தம் பழங்கள் விளைவிக்கப்படுவதுடன் அரிசி, பழங்கள் போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.
இங்கு சுமார் 60 முதல் 70 வரையிலான நீர்ச்சுனைகள் உற்பத்தியாகின்றன. இதில் 32 டிகிரி செல்ஷியஸ் வரை தகிக்கும் சுடுநீர்சுனைகளும் உள்ளன. இவற்றில் மிகப்பிரசித்திப் பெற்றது 'ஐன் நுஜூம்' எனப்படும் நீர்ச்சுனையும் ஒன்றாகும். இந்நீரில் நோய் நிவாரணம் தரும் சல்பியூரிக் (கந்தக) அமிலம் கலந்து சூடான நீராக வெளியாவது சிறப்பான ஒன்றாகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.