.

Pages

Sunday, June 17, 2018

TIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்' விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் அமீரக அமைப்பின் (TIYAசார்பில், 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்' விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து அமீரக TIYA அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக அமீரக TIYA அமைப்பிற்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற அமீரக TIYA வின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டுவிட்டது.

வழங்கிய பொருட்களின் விபரங்கள்:
10 கிலோ அரிசி, கடற்பாசி, சேமியா, ஏலம், திராட்சை, முந்திரி, இஞ்சி, பூண்டு, ஆயில், ஒரு உயிர் கோழி, மசாலா பொருட்கள், 100 ரூபாய் பணம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 135 குடும்பங்கள் பயனடைந்தனர்.

அருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றோம்.

அமீரக TIYA மற்றும் குவைத் வாழ் முஹல்லா சகோதரர் பாவா பகுருதின் (பிச்சை குட்டி) மூலம் பெறப்பட்ட தொகைகளை நமது முஹல்லாவில் ஆராவாரமின்றி விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், அமீர TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா தொகையினை வழங்கிய அமீரக வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ பிரார்த்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA)
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.