.

Pages

Thursday, June 28, 2018

ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 28
ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு வழங்கும் நோக்கோடு கடந்த 2018 ஜனவரி 25 ஆம் தேதி முதல் சுமார் 87 வகையான துறைகளில் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி இத்தடை நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இவ்வேலைவாய்ப்புகளின் மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 32,000 ஓமானியர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக மீடியா, ஏர்லைன்ஸ், கணக்கியல், நிர்வாக மேலாண்மை, மருத்துவத் துறை, இன்சூரன்ஸ், தகவல் தொடர்பு துறை போன்றவவைகளே தடை செய்யப்பட்ட முக்கிய துறைகளாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.