.

Pages

Saturday, June 23, 2018

'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை பிரமுகரின் கட்டுரை!

அதிராம்பட்டினம், ஜூன் 23
தமிழகத்தின் பிரபல தமிழ் நாளிதழ் தினமணி சார்பில், தொடர்ந்து 4 -ஆவது ஆண்டாக ஈகைப் பெருநாள் மலர் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் பெருமைகளை எடுத்துரைப்பதோடு, பிற மதத்தினரும் இஸ்லாத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அல்லாதவரும் இஸ்லாம் குறித்து தெளிவு பெறுவதற்கு இந்த மலர் உதவுகிறது.

இதில், தமிழகத்தின் பிரபலங்கள் வைகோ, பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ், மு.மேத்தா, எம்.ஏ முஸ்தபா, டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, எம்.ஜி தாவூத் மியாகான், பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி, வீரபாண்டியன், வீ. லெட்சுமி நாராயணன், நாராயணன் திருப்பதி, கவிஞர்கள் தி.மு அப்துல் காதர், யுகபாரதி, கபிலன் வைரமுத்து, எம்.ஜி.கே நிஜாமுதீன், எஸ்.எஸ் ஷாஜஹான், மு.குலாம் முகமது, ஈரோடு தமிழன்பன், பெ.மணியரசன் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் படைப்புகள் மலரில் இடம்பெற்றுள்ளன.

இதில், 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் 'சேக்கனா நிஜாம்' என்கிற எம். நிஜாமுதீன் அவர்களின் கட்டுரையும் இடம்பிடித்துள்ளது. இக்கட்டுரையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வட்டி வசூலின் கொடூரம் குறித்தும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், தமிழகத்தில் ஏழைகளின் நிதியமாக செயல்படும் பைத்துல்மால் அமைப்பின் சேவை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

164 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூ.50 மட்டுமே. இந்நூலை பிறருக்கு அன்பளிப்பு செய்ய விரும்புவோர் தாரளமாக வழங்கலாம். பிற மதத்தினர் இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள மிகவும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.
 
 
 

1 comment:

  1. வாழ்த்துகள்
    அருமையான கட்டுரை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.