.

Pages

Friday, June 29, 2018

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ந் தேதி சாலை மறியல்!

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்கரை பகுதி ரயில் நுகர்வோர் குழு நிறுவனர் தம்பிக்கோட்டை ராஜாராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;

அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட திருவாரூர் ~ காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ~ அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் ரயில் போக்குவரத்து இல்லாததால், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்ட கடற்கரைப் பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தம்பிக்கோட்டை வருவாய் சரக ரயில் பாதையிலிருந்து தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவாக்காடு ஆகிய 3 ரயில் நிலையங்களை அகற்றுவதுடன், 7 ரயில்வே கேட்டுகளை அகற்ற இருப்பதாக தெரிகிறது.

தஞ்சாவூர் ~ திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 63 கிராம மக்கள் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தாமல் தகுதி குறைந்த தில்லைவிளாகம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி 63 கிராம மக்களை  அலைகழிப்பதை ஏற்க முடியாது.

மேற்கண்ட கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர் ரெங்கராஜன் தலைமை தாங்குகிறார். இதில், 3 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.