அதிரை நியூஸ்: ஜூன் 27
துபையில் வாழும் ஒரு சிரியா நாட்டுக் குடும்பம் ஒன்று தங்களது கடந்த வெள்ளிக்கிழமை பெருநாள் தினத்தன்று விடுமுறையை கொண்டாட ஒமன் நாட்டின் மஸ்கட் நோக்கி தங்களின் காரில் பயணிக்கின்றது. அமீரகத்தையும் ஓமனையும் பிரிக்கும் 'ஹத்தா' (Hatta) எல்லையருகே சென்றபோது சரியாக காலை 7 மணியளவில் சிரியா குடும்பத்தினரின் கார் பழுதடைந்து விடுகின்றது. காரில் வந்த குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த 'ஹத்தா' எல்லையில் பணியிலிருந்த இமிக்கிரேசன் துறை போலீஸான சாலிம் அல் பெத்வாவி என்பவர் உதவிக்கு வந்துள்ளார்.
பெருநாள் தினத்தின் காலை நேரம் என்பதால் எந்த மெக்கானிக்கும் பதிலளிக்கவில்லை, ரெக்கவரி வாகனமும் கிடைக்கவில்லை, டேக்ஸிக்களும் அந்த நேரத்தில் இயங்கவில்லை. போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி தன்னுடைய லேண்ட் குரூஸர் வாகனத்தை பத்தாஹ் என்கிற அந்த சிரியரிடம் தந்து அவரது பயணத்தை தொடருமாறு கூறி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மேலும் அந்த சிரியா குடும்பத்தினர் மஸ்கட்டிலிருந்து திரும்புமுன் பழுதான அவரது வாகனத்தையும் பழுதுபார்த்து வைத்திருந்துள்ளார். மேலும் மஸ்கட்டிலிருந்து திரும்பிய குடும்பத்தை தன்னுடைய லேண்ட் குரூஸரிலேயே அமரச் செய்து துபை வரை வந்து விட்டுச் சென்றுள்ளார். மெக்கானிக்கிற்கு கொடுத்த செலவுதொகைக்கு மேல் ஒரு காசைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்த அரிய மனிதநேய உதவியைச் செய்த போலீஸாரைப் பற்றி துபையிலிருந்து ஒளிபரப்பாகும் 'ஸாமா துபை டிவி' எனும் தொலைக்காட்சியின் 'அல் பாத் அல் முபாஷர்' எனும் நிகழ்ச்சியில் தன்னுடைய இனிய அனுபவங்களை தெரிவித்தார் பத்தாஹ். இந்த செய்தி துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 'இது தான் இமராத்திகளின் இனிய குணம்;' என பாராட்டி பகிர்ந்துள்ளதுடன் உடனடியாக அந்த போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி அவர்களுக்கு முதன்மை ஆபீஸர் (First Officer) என்ற பதவி உயர்வையும் வழங்கி கவுரவித்துள்ளார்.
நமது நாட்டில் அரசு சம்பளம் பெறும் போலிஸ்காரர்களில் பெரும்பாலானோர் வலம் வரும் நிலையில் சில 'போலீஸ்'காரர்கள் செய்யும் பணிக்கு அப்பாற்பட்ட மனிதநேய சேவைகள் அத்துறையினர் மீதான பொது வெறுப்பை மறந்து நேசிக்கச் செய்துவிடுகின்றதற்கும் மேலாக அமீரகத்தில் ஒரு போலீஸ்காரர் செய்த தன்னலமற்ற சேவை அந்நாட்டின் மன்னரையே நேசிக்கச் செய்ததுடன் உடனடி பதவி உயர்வையும் பெற்றுத் தந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதே.
Source: The National
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் வாழும் ஒரு சிரியா நாட்டுக் குடும்பம் ஒன்று தங்களது கடந்த வெள்ளிக்கிழமை பெருநாள் தினத்தன்று விடுமுறையை கொண்டாட ஒமன் நாட்டின் மஸ்கட் நோக்கி தங்களின் காரில் பயணிக்கின்றது. அமீரகத்தையும் ஓமனையும் பிரிக்கும் 'ஹத்தா' (Hatta) எல்லையருகே சென்றபோது சரியாக காலை 7 மணியளவில் சிரியா குடும்பத்தினரின் கார் பழுதடைந்து விடுகின்றது. காரில் வந்த குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த 'ஹத்தா' எல்லையில் பணியிலிருந்த இமிக்கிரேசன் துறை போலீஸான சாலிம் அல் பெத்வாவி என்பவர் உதவிக்கு வந்துள்ளார்.
பெருநாள் தினத்தின் காலை நேரம் என்பதால் எந்த மெக்கானிக்கும் பதிலளிக்கவில்லை, ரெக்கவரி வாகனமும் கிடைக்கவில்லை, டேக்ஸிக்களும் அந்த நேரத்தில் இயங்கவில்லை. போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி தன்னுடைய லேண்ட் குரூஸர் வாகனத்தை பத்தாஹ் என்கிற அந்த சிரியரிடம் தந்து அவரது பயணத்தை தொடருமாறு கூறி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மேலும் அந்த சிரியா குடும்பத்தினர் மஸ்கட்டிலிருந்து திரும்புமுன் பழுதான அவரது வாகனத்தையும் பழுதுபார்த்து வைத்திருந்துள்ளார். மேலும் மஸ்கட்டிலிருந்து திரும்பிய குடும்பத்தை தன்னுடைய லேண்ட் குரூஸரிலேயே அமரச் செய்து துபை வரை வந்து விட்டுச் சென்றுள்ளார். மெக்கானிக்கிற்கு கொடுத்த செலவுதொகைக்கு மேல் ஒரு காசைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்த அரிய மனிதநேய உதவியைச் செய்த போலீஸாரைப் பற்றி துபையிலிருந்து ஒளிபரப்பாகும் 'ஸாமா துபை டிவி' எனும் தொலைக்காட்சியின் 'அல் பாத் அல் முபாஷர்' எனும் நிகழ்ச்சியில் தன்னுடைய இனிய அனுபவங்களை தெரிவித்தார் பத்தாஹ். இந்த செய்தி துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 'இது தான் இமராத்திகளின் இனிய குணம்;' என பாராட்டி பகிர்ந்துள்ளதுடன் உடனடியாக அந்த போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி அவர்களுக்கு முதன்மை ஆபீஸர் (First Officer) என்ற பதவி உயர்வையும் வழங்கி கவுரவித்துள்ளார்.
நமது நாட்டில் அரசு சம்பளம் பெறும் போலிஸ்காரர்களில் பெரும்பாலானோர் வலம் வரும் நிலையில் சில 'போலீஸ்'காரர்கள் செய்யும் பணிக்கு அப்பாற்பட்ட மனிதநேய சேவைகள் அத்துறையினர் மீதான பொது வெறுப்பை மறந்து நேசிக்கச் செய்துவிடுகின்றதற்கும் மேலாக அமீரகத்தில் ஒரு போலீஸ்காரர் செய்த தன்னலமற்ற சேவை அந்நாட்டின் மன்னரையே நேசிக்கச் செய்ததுடன் உடனடி பதவி உயர்வையும் பெற்றுத் தந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதே.
Source: The National
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.