.

Pages

Monday, April 8, 2013

MSM நகர் சாலையோர பள்ளத்தில் விழுந்த மாட்டை விரைவாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் !

அதிரை  MSM நகர் ஈசிஆர் சாலை ஓரத்தில் மிகப்பெரிய வாய்க்கால் உள்ளது. சாலையிலிருந்து சுமார் எட்டு அடி பள்ளத்தாக்கைக் கொண்ட இவை பராமரிப்பின்றி காணப்படுவதால் முட்புதர்களும் செடிகளும் ஏராளமாக மண்டிக் காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையோரம் சென்ற மாடு ஒன்று அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டது. உயிருக்கு போராடிய அந்த மாட்டை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மேலே கொண்டுவர மிகுந்த முயற்சியில் ஈடுபட்டனர். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடன் களப்பணியில் ஈடுபட்டு பள்ளத்தில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தீயணைப்பு துறையினரின் அரும்பணியை பாராட்டி மகிழ்ந்தனர்.





6 comments:

  1. பரவாயில்லையே தீ முழுதும் பரவி அதுவா அணைந்த பிறகு வரும் நம்ம ஆளுங்க, மாட உசுரோட புடிச்சிட்டாங்களா ... சபாஷ் தீயணைப்பு துறைக்கு ஒரு பாராட்டுகள்

    ReplyDelete
  2. உடன் தகவல் பதிந்து அனைவருக்கும் அறியச்செய்த அதிரை நியூஸ்சிற்கு நன்றி.

    தீயணைப்புப்படையினர் உடன் வந்து மாட்டை உயிரோடு மீட்டது பாராட்டப்படவேண்டியவை.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. உடன் தகவல் பதிந்து அனைவருக்கும் அறியச்செய்த அதிரை நியூஸ்சிற்கு நன்றி.

    பரவாயில்லையே தீ முழுதும் பரவி அதுவா அணைந்த பிறகு வரும் நம்ம ஆளுங்க, மாட உசுரோட புடிச்சிட்டாங்களா ... சபாஷ் தீயணைப்பு துறைக்கு ஒரு பாராட்டுகள்

    ReplyDelete
  5. பாராட்டப்படவேண்டிய தீயணைப்புப்படையினர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.