அதிரை பிலால் நகர் அருகே உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் இரயில்வே கேட்டினால் அதன் அருகே அமைந்துள்ள அபாயகரமான வளைவைக் கொண்ட பழைய சாலையில் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படும். இவற்றை தடுக்கும் நோக்கில் இந்த மூடிய ரயில்வே கேட் திறப்பது எப்போது ? என்ற பொதுமக்களின் கோரிக்கையை இந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்களிடமும், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தனர்.
சேதுசமுத்திர திட்ட விழிப்புணர்ச்சி மாநாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தஞ்சை மாவட்டம் அதிரைக்கு நேற்று [ 15-05-2013 ] முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வந்தார். அப்போது அவருக்கு அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.
இதன் பின்னர் பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனே இரயில்வே கேட்டை திறப்பதற்குரிய ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்துள்ளார். அப்போது தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பிக்கோட்டை ரெத்தின பிரகாஷ் அவர்களும் உடனிருந்தார்.
மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, அது போல நமது கோரிக்கையும் நிறைவேறட்டும், அது சரி சாப்பாடு யார் வீட்டில் என்பதை பதிவு செய்தல் இன்னும் சந்தோசம்...........
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, அது போல நமது கோரிக்கையும் நிறைவேறட்டும், அது சரி சாப்பாடு யார் வீட்டில் என்பதை பதிவு செய்தல் இன்னும் சந்தோசம்...........
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அப்படியே நமதூருக்கு ரயிலு வருவதற்கும் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான T.R.பாலு அவர்களின் கவனத்திற்கு கொண்டுபோனால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteயார்வந்தாலும் நம் ஊருக்கு நல்லது நடந்தால் சரிதான்.
ReplyDelete