.

Pages

Thursday, May 16, 2013

பிலால் நகர் இரயில்வே கேட்டை திறப்பதற்கு முயற்சி ! அதிரையில் ஆய்வைக் மேற்க்கொண்ட டிஆர் பாலு உறுதி !

அதிரை பிலால் நகர் அருகே உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் இரயில்வே கேட்டினால் அதன் அருகே அமைந்துள்ள அபாயகரமான வளைவைக் கொண்ட பழைய சாலையில் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படும். இவற்றை தடுக்கும் நோக்கில் இந்த மூடிய  ரயில்வே கேட் திறப்பது எப்போது ? என்ற பொதுமக்களின் கோரிக்கையை இந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்களிடமும், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தனர்.

சேதுசமுத்திர திட்ட விழிப்புணர்ச்சி மாநாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தஞ்சை மாவட்டம் அதிரைக்கு நேற்று [ 15-05-2013 ] முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வந்தார். அப்போது அவருக்கு அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.

இதன் பின்னர் பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனே இரயில்வே கேட்டை திறப்பதற்குரிய ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்துள்ளார். அப்போது தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பிக்கோட்டை ரெத்தின பிரகாஷ் அவர்களும் உடனிருந்தார்.


4 comments:

  1. மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, அது போல நமது கோரிக்கையும் நிறைவேறட்டும், அது சரி சாப்பாடு யார் வீட்டில் என்பதை பதிவு செய்தல் இன்னும் சந்தோசம்...........

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, அது போல நமது கோரிக்கையும் நிறைவேறட்டும், அது சரி சாப்பாடு யார் வீட்டில் என்பதை பதிவு செய்தல் இன்னும் சந்தோசம்...........

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. அப்படியே நமதூருக்கு ரயிலு வருவதற்கும் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான T.R.பாலு அவர்களின் கவனத்திற்கு கொண்டுபோனால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  4. யார்வந்தாலும் நம் ஊருக்கு நல்லது நடந்தால் சரிதான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.