.

Pages

Friday, May 3, 2013

அதிரை பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் ஆய்வு !

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்தப் பொருட்காட்சியில் வர்த்தக நிறுவனங்கள் சார்பாக ஸ்டால்கள் அமைத்து தங்களின் பொருட்களை பொதுமக்கள் மத்தியில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக பார்வையாளர்கள் நாள் ஒன்றுக்கு 2250 முதல் 2500 வரை வந்து செல்கின்றனர். மேலும் புத்தக ஸ்டால், இலவச கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் இனிப்பு நீர் பரிசோதனைகள் ஆகியன அங்கே இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

மேலும் பொதுமக்களை மகிழ்விக்க ராட்சஸ ராட்டணங்கள், ஊஞ்சல்கள்,  உயர்ந்த மனிதன், அபூர்வ விலங்கினங்கள், அபூர்வ பறவைகள் போன்றவை இடம்பெற்றுள்ளதோடு சிறுவர் சிறுமிகளுக்காக குதிரை சவாரி, ஒட்டக சவாரி மற்றும் அவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இத்துணை பாசிட்டிவான விசயங்கள் இருந்தும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறம்பாக கரோக்கி மூலம் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியால் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகள் சிலரும் குறை பட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அதிரையில் வசிக்கக்கூடிய மார்க்க அறிஞர்கள் பொருட்காட்சியை எடுத்து நடத்துகின்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்ற நிர்வாகத்தினர் இன்று [ 03-05-2013 ] முதல் கரோக்கி மூலம் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதனால் இசை நிகழ்ச்சி நடத்தும் மேடை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. ரத்து செய்ததை அடுத்து பொருட்காட்சியில் இன்று அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. வியாபாரமும் படு ஜோராக நடைபெறுவதாக வர்த்தக நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.
பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் ஆய்வு !
அதிரையைச் சார்ந்த தனி நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று [ 03-05-2013 ] பொருட்காட்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர் ஆய்வை மேற்கொண்டார்.

இதுகுறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் கருத்தை பெற்றோம்...

அதிரை கலாச்சார மற்றும் வர்த்தக அமைப்பின் சார்பாக நடத்தும் இந்த பொருட்காட்சி இந்திய சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்க்கென்று பதிமூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த ஆய்வின் மூலம் தான் திருப்தி அடைவதாகவும் கருத்து தெரிவித்தார்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அலுவலர் வருகைக்கு நன்றி மற்றும் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.