.

Pages

Tuesday, May 21, 2013

படித்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவனின் ஒரு கடிதம்...

அன்புள்ள ஆசிரியர்களுக்கு,

நலம் நலமறிய ஆவல் !

பல தலைமுறைகளைக் கண்ட காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி பெருமையுள்ள பாரம்பரியம் மிக்கது. அதிரையின் நல்லடையாளங்களுள் ஒன்று. ஆயிரக்கணக்கான மாணவர்களின் அறியாமையைப் போக்கி கல்விக் கண்களுக்கு ஒளிதந்த ஒப்பற்ற பள்ளி. என் பள்ளியில் படித்தவர்கள் எல்லாரும் பாமர மக்களின், வறியவர்களின், உழைப்பாளிகளின் பிள்ளைகள். அவர்கள் குடும்பத்தின் வாழ்நிலையை உயர்த்தக் காரணமாயிருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் நாம் கல்வி கற்கும் நாட்கள் வெறும் நாட்கள் மட்டுமல்ல. இன்றைய பொழுதில் 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவர்களெல்லாம் உலகமெங்கும் சிதறிக்கிடந்தாலும் தாங்கள் படித்த பள்ளியை மறக்காமல் நெஞ்சம் நெகிழும் மலரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவ்வப்போது அசைபோடுவதுண்டு.

சரி விசயத்துக்கு வருகிறேன்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வியைத் தழுவி சென்ற ஆண்டை வீட பள்ளியின் சதவீதம் குறையக் காரணமாக இருந்துள்ளனர். இதில் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டுமே பெரும்பாலான மாணவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். கடினம் எனக் கருதக்கூடிய பாடங்களில் தேர்ச்சியும், இலகுவானவை எனக் கருதக்கூடிய பாடங்களில் தோல்வியையும் தழுவியுள்ளதில் எங்கேயோ தவறு நடந்துள்ளது என்பது மட்டும் அறிய முடிகிறது.

சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வியை தனது கடமையெனக்கருதி, மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களாகிய நீங்களே !

கல்விக்காக அரசு வழங்குகின்ற மானியம், உதவித்தொகை மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகியவற்றை மறந்து விடுகின்ற இன்றைய பெற்றோர்கள் 'நல்ல பள்ளியை நாடுகிறோம்' எனச் சொல்லி ஆங்கில பள்ளிகளின் மேல் மோகங்கொண்டு தங்களின் பொருளையும், நேரதையும் வீண் விரயமாக்கி வருகின்ற இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை உயர்த்துவதில் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களாகிய உங்களிடம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் அடைக்கலம் தந்து, அவர்களின் நல்வாழ்வுக்கு அடித்தளமிட்டிருக்கிறது. ஏழை-பணக்காரர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பாகுபாடற்ற சமுதாய மாற்றத்தை உருவாக்கும், பிரதிபலன் பாராது தொண்டாற்றும், ஆற்றல்மிக்கது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பள்ளியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது, உள்ளூர் மக்களின் கல்வியறிவை மலரச்செய்வது, மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது போன்றவற்றின் முக்கிய பொறுப்பு ஆசிரியராகிய நீங்கள் மட்டுமே என்பதை உணர்ந்து சக ஆசிரியர்களுடன் ஒற்றுமையுடன் கைகோர்த்து உள்ளூர் பள்ளியை கல்வி, விளையாட்டு, சமூகத்தொண்டு போன்றவற்றில் மாவட்ட, மாநில அளவில் சாதனைப்பெற இன்று முதல் முயற்சியில் ஈடுபடுங்கள்.

நன்றி !

இப்படிக்கு,
கீழ்படிந்துள்ள முன்னாள் மாணவன்,
சேக்கனா M. நிஜாம்

11 comments:

  1. முன்னாள் மாணவரின் சந்தேகம் நியாயமானதே.!

    எல்லாம் ஆசிரியர்கள் மனசு வைத்தால் முடியும். முன்னாள் மாணவரின் சந்தேகத்தை ஆசிரியர்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்.!?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    உங்களின் ஆதங்கம் நன்கு புரிகின்றது.

    அன்று 100 சதவிகித ஆசிரியப் பெருமக்களும் மானவச்செல்வங்களுக்காக உழைத்தார்கள், இலவசமாக டியுசன் எடுத்தார்கள்.

    இன்றைய நிலை மாறி விட்டது, எப்படி தெரியுமா, முழுக்க முழுக்க மாணவச்செல்வங்களின் திறமையினால் தான் இத்தனை தேர்ச்சிகள். அதே சமயம் ஒரு சில ஆசிரியர்கள் வேண்டுமானால் நன்றாக உழைக்கின்றார்கள் என்று சொல்ல முடியும்.

    இப்படிக்கு.
    வெகு முன்னாள் மாணவன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. முன்னாள் மாணவரின் சந்தேகம் நியாயமானதே.!

    எல்லாம் ஆசிரியர்கள் மனசு வைத்தால் முடியும். முன்னாள் மாணவரின் சந்தேகத்தை ஆசிரியர்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்.!?

    ReplyDelete
  4. Special Class என்பது நான் படிச்ச காலத்துலேர்ந்தே இருக்கிறது. கிளாஸில் நடத்துவதை இன்னும் விளக்கமாக ஸ்பெஷல் கிளாசில் சொல்லித்தருவாங்க. அதுக்கு எக்ஸ்ட்ரா பணம்.

    மாணவர்களின் தேர்ச்சி என்பது பெற்றோர்களின் கவனத்திலும், கண்காணிப்பிலும் இருக்கிறது. நம்மூரில் பெரும்பாலான வாப்பாக்கள் வெளிநாடுகளில் இருக்காங்க. கொஞ்சமேனும் படிச்ச உம்மாக்களை நம் இளைஞர்கள் ஈஸியாக ஏமாற்றிவிடுறாங்க. இது தன் தலையில் தானே ;;;;;; அள்ளிப்போட்டுக்கிறது மாதிரி. படிப்பின் பயனை எடுத்து சொல்ல ஆள் வேணும், அதை வாப்பாமார்கள் ஃபோனிலும் எத்திவைக்கலாம். அதிக நேரம் மகனுடன் ஃபோனில் பேச செலவிடனும், பணத்தின் அதை சம்பாதிப்பதின் கஷ்டங்களையும் எடுத்து சொல்லனும். கேட்டவுடன் தான் அனுபவிக்கலே இவனாவது அனுபவிக்கட்டும் என்று பைக், செல்ஃபோன்.. மேலும் பல வாங்கிக்கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பன் மாலிக்கின் கருத்திற்கு மிக்க நன்றி !

      பெற்றோர் - மாணவன் ஆகியோரின் ஒத்துழைப்பு அவசியம் என்றாலும் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டும் மாணவர்கள் தோல்வியைத் தழுவிருப்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயமாக இருக்கிறது. இந்தப் பாடங்களுக்குரிய பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் இவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

      வெளிநாடு வாப்பா, படிக்காத உம்மா இவர்களின் பிள்ளைகளில் சிலர் பள்ளியளவில் முதல் மதிப்பெண் எடுப்போரும் உண்டு.

      Delete
  5. உண்மையான சமூக ஆர்வலர் என்பதை உங்களின் பேனா மையின் உண்மைகள் கூறும். உங்களைப் புரியாதோர்- தூற்றுவோர்களின் விமர்சனங்களை எல்லாம் கேளாமல், சமுதாய விழிப்புணர்வு, மாணவர் நலன் என்று பாடுபடுவதோடு, துணிவுடன் - நேர்மையுடந் நேராக தான் படித்தப் பள்ளிக்கே கடிதம் எழுதிக் கேட்கும் உங்களின் செயல் அறிந்து- திறன் வியந்துப் பாராட்டுகிறேன்.


    உங்களின் சமூக விழிப்புணர்வு பக்கங்களின் சார்பாக கல்வி விருது வழங்கும் ஏற்பாடுகள் உண்டா?

    அதிரையளவில் “தமிழ்ப்பாடத்தில்” மட்டும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் அல்லது மாணவி பெயர்/ பள்ளி விவரம் அறியத் தாருங்கள்.

    தமிழைக் காதலிக்கும் நான், தமிழில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோர்க்கு ஊக்கமளிக்க விழைகிறேன், உங்களின் சார்பாக!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவிக்குறள்

      // உங்களின் சமூக விழிப்புணர்வு பக்கங்களின் சார்பாக கல்வி விருது வழங்கும் ஏற்பாடுகள் உண்டா?//

      சமூக விழிப்புணர்வு பக்கங்களின் சார்பாக தமிழகளவில் கட்டுரை / கவிதைப் போட்டி நடத்த உத்தேசித்துள்ளோம். இறைவன் நாடினால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

      // அதிரையளவில் “தமிழ்ப்பாடத்தில்” மட்டும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் அல்லது மாணவி பெயர்/ பள்ளி விவரம் அறியத் தாருங்கள்.//

      இன்ஷா அல்லாஹ்

      // தமிழைக் காதலிக்கும் நான், தமிழில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோர்க்கு ஊக்கமளிக்க விழைகிறேன், உங்களின் சார்பாக!//

      நல்ல முயற்சி !

      பாராட்டுகள் கவிக்குறளுக்கு

      Delete
  6. தம்பி நிஜாம் அவர்களே!

    பலரின் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறீர்கள். மாணவர்களுக்குத்தான் அறிவுரை சொல்ல முடியும். ஆசிரியர்களுக்கே சொல்ல வேண்டிய நில இருந்தால் அது பெரிய துரதிஷ்டம். ஆனால் ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிவிடவும் முடியாது. இன்றைய மாணவர்களிடமும் பொறுப்புணர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்தில் மதிப்பெண்களை கொட்டிக் குவித்த பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வியுற்றது தனிப்பட்ட முறையில் வருத்தம். நாம் கூட ஏந்த வகையிலாவது இந்த மாணவர்களுக்கு உதவி இருக்கலாமே என்று கூட யோசிக்க வைத்தது.

    உள்ளூரில் உள்ள படித்தவர்களும் இனி தனிப்பட்ட பங்காற்றும் வகைகளில் - தன்னார்வ முனைப்புடன் செயல்பட ஒரு செயல் திட்டம் வகுக்கப் பட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்.

    கணக்குப் பதிவியல் மற்றும் பொருளாதார பாட வகுப்புகளில் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்திட காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி !

      பெற்றோர் - மாணவன் ஆகியோரின் ஒத்துழைப்பு அவசியம் என்றாலும் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டும் மாணவர்கள் தோல்வியைத் தழுவிருப்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயமாக இருக்கிறது. இந்தப் பாடங்களுக்குரிய பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் இவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

      சக ஆசிரியர்கள் ஒற்றுமையாக கைகோர்த்து திட்டங்கள் பல வகுத்து மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. இதற்கு மாணவன் - பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்பும் அவசியம்.

      // உள்ளூரில் உள்ள படித்தவர்களும் இனி தனிப்பட்ட பங்காற்றும் வகைகளில் - தன்னார்வ முனைப்புடன் செயல்பட ஒரு செயல் திட்டம் வகுக்கப் பட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன். //

      அருமையான யோசனை. இது குறித்து நல்லதொரு திட்டத்தை ஏற்படுத்துவோம் [ இன்ஷா அல்லாஹ் ]

      // கணக்குப் பதிவியல் மற்றும் பொருளாதார பாட வகுப்புகளில் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்திட காத்து இருக்கிறேன்.//

      இக்குறிப்பிட்ட பாடங்களின் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக உதவிகள் செய்த முன்வந்திருப்பது பிறரும் உதவ முன்வர நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

      Delete
  7. முன்னாள் மாணவரின் கடிதம் வரவேற்க தக்கது மாணவனின் ஆசைகள் நிரைவேரட்டும் அதற்க்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

    ReplyDelete
  8. தம்பி நிஜாமின் ஆதங்கம் நிஜமானது ..

    இது போன்ற குறைகளை களைய கெய்டுடி டியூசன் செண்டர் என்ற பெயரில் இரண்டு வருடம் அதிரையில்
    நடத்தி வந்தேன் பல ஆசிரியர்கள் பட்டுக்கோட்டையிலிருந்து வந்து பாடம் எடுத்தனர் ..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.