.

Pages

Wednesday, May 22, 2013

சுகாதாரமற்ற உணவை விற்ற சொந்த தாய்க்கே அபராதம் விதித்த சவூதி நீதியரசர் !


ரியாத்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்... குற்றமே... என்ற நம்மூர் நக்கீரர் ஸ்டைலில் சவூதியில் ஒரு அதிகாரி, உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, பாராபட்சம் பாராமல் தன் தாயின் உணவு விடுதிக்கே அபராதம் விதித்துள்ளார்.
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரில் உள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு ரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததாம். அதைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அந்த உணவகம் ஜமாலின் தாயாருக்கு சொந்தமானது என்பது தான். அவர் அபராதம் விதித்ததும் தன் சொந்த தாயாருக்கே.

சொந்த தாயாரின் உணவகம் என்று தெரிந்தும் உடனடி நடவடிக்கை எடுத்த ஜமாலை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் 'டுவிட்டரில்' அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.

பரிந்துரை : மான். A. ஷேக் [ கனடா ]

நன்றி: Jayachitra

3 comments:

  1. சட்டம் கடுமையாக பின்பற்றுப்படும் நாடுகளில் சவூதியும் ஒன்று. நீதிபதியின் தீர்ப்பு உலக நாடுகளுக்கே நல்லதொரு முன்உதாரணாமாக திகழ்கிறது.

    பார்வைக்கு எடுத்துவந்த அன்புச்சகோதரர் மான் சேக் அவர்களுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி

    தகவலுக்கும் நன்றி.
    நெறியான சரியான முறையான நீதி ஒருபோதும் சாவதில்லை.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. தவறை யார் செய்தாலும் தவறுதான் என்று நினைத்து தாய் என்றும் பாராமல் தான் பொறுப்பேற்றிருக்கும் பதவிக்கு கலங்கம் ஏற்ப்படுத்தாமல் சுயநலமில்லா சரியான நடவடிக்கை எடுத்திருக்கும் ஜமால் அல் எனேசி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.