ரியாத்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்... குற்றமே... என்ற நம்மூர் நக்கீரர் ஸ்டைலில் சவூதியில் ஒரு அதிகாரி, உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, பாராபட்சம் பாராமல் தன் தாயின் உணவு விடுதிக்கே அபராதம் விதித்துள்ளார்.
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரில் உள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு ரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததாம். அதைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அந்த உணவகம் ஜமாலின் தாயாருக்கு சொந்தமானது என்பது தான். அவர் அபராதம் விதித்ததும் தன் சொந்த தாயாருக்கே.
சொந்த தாயாரின் உணவகம் என்று தெரிந்தும் உடனடி நடவடிக்கை எடுத்த ஜமாலை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் 'டுவிட்டரில்' அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.
பரிந்துரை : மான். A. ஷேக் [ கனடா ]
நன்றி: Jayachitra
சட்டம் கடுமையாக பின்பற்றுப்படும் நாடுகளில் சவூதியும் ஒன்று. நீதிபதியின் தீர்ப்பு உலக நாடுகளுக்கே நல்லதொரு முன்உதாரணாமாக திகழ்கிறது.
ReplyDeleteபார்வைக்கு எடுத்துவந்த அன்புச்சகோதரர் மான் சேக் அவர்களுக்கு மிக்க நன்றி !
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நெறியான சரியான முறையான நீதி ஒருபோதும் சாவதில்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தவறை யார் செய்தாலும் தவறுதான் என்று நினைத்து தாய் என்றும் பாராமல் தான் பொறுப்பேற்றிருக்கும் பதவிக்கு கலங்கம் ஏற்ப்படுத்தாமல் சுயநலமில்லா சரியான நடவடிக்கை எடுத்திருக்கும் ஜமால் அல் எனேசி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.
ReplyDelete