.

Pages

Friday, May 24, 2013

இந்தியளவில் சாதனை புரிந்த அதிரை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அவர்களின் மகனோடு ஒரு நேர்காணல் [ காணொளி ]

தஞ்சை மாவட்டம் ஆம்பலாப்பட்டு குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதிரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா, இவர்களுக்கு ஷாலினி, வர்சின், ராகவேந்தன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் எட்டு வயதுடைய ராகவேந்தன், தஞ்சையிலுள்ள தூய இருதய பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து முடித்து, நடப்பாண்டு நான்காம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். சிறுவன் ராகவேந்தன் தஞ்சை யாகப்பா நகரிலுள்ள ஆலன் திலக் ஷோடோ ரியூ கராத்தே பள்ளியில் கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு பயிற்சியாளர் சண்முகராஜ் பயிற்சியை அளித்து வருகிறார்.

ஏற்கனவே ராகவேந்தன் கராத்தேவில் நீல நிற பெல்ட் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி டில்லியில் நடந்த டால்கோ டோரா உள் விளையாட்டரங்கில் நடந்த தேசிய அளவில் கராத்தே போட்டியில் பங்கேற்று கட்டா பிரிவிலும் குழு பயிற்சி போட்டியிலும் முதலிடம் பிடித்து இரண்டு தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து டில்லியில் தேசிய அளவில் நடந்த கராத்தே போட்டியில் கட்டா பிரிவு குழு பயிற்சி போட்டியில் இரண்டு தங்க மெடல்களை தட்டிப்பறித்த தஞ்சை சிறுவன் ராகவேந்தனுக்கு டோரன்மெண்ட் சேர்மன் சென்ஸில் சுசில் கவுல் தங்கப்பதக்கங்களை வழங்கினார். இதில் பயிற்சியாளர் சண்முகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இளம் வயதில் கராத்தே போட்டியில் சாதனை படைத்த சிறுவனுக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக பாராட்டுதலை அன்புடன் தெரிவித்துக்கொண்டு சிறுவனிடம் ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

 





16 comments:

  1. சாதனை புரிந்து வீட்டிற்கும் - நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

    உன்னை பெற்றவர்கள் - கற்பித்தவர்கள் மிகுந்த பெருமையடைவார்கள்

    இன்னும் சாதனை பல புரிந்துட மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முதலிடம் என்பது பஞ்சுமெத்தை.அதில் அமர்ந்து விட்டால் அது கொடுக்கும் சுகம் தனி.முதலிடம் பெற்ற அனைவரும் பணம் சம்பாதிப் பார்கள் என்று சொல்ல முடியாது.ஆனால் கட்டாயம் புகழை சம்பாதிக்கலாம்.அதன் படி இந்த பிஞ்சு ராஹவேந்திரன் தன இளம் வயதில் கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளான்.தம்பி ராஹவேந்திரன் தஞ்சை மட்டும் அல்லாமல் டெல்லியிலும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சி அவர்களின் பெற்றோர்க்கும் மட்டும் அல்ல.., நம் தஞ்சை மாவட்டத்துக்கே மகிழ்ச்சியை தருகிறது. தம்பி ராஹவேந்திரன் வாழ்க வளமுடன்..!
    வாழ்த்துக்களுடன்
    அஜ்மீர் ஷாகுல்
    மணிச்சுடர் நாளிதழ் & அதிரை நியூஸ்.

    ReplyDelete
  3. கராத்தேவில் வெற்றி பெற்ற ராஹவேந்திரனுக்கு எனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    கராத்தேவில் வெற்றி பெற்ற ராஹவேந்திரனுக்கு எனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    சாதனை புரிந்து வீட்டிற்கும் - நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

    உன்னை பெற்றவர்கள் - கற்பித்தவர்கள் மிகுந்த பெருமையடைவார்கள்

    இன்னும் சாதனை பல புரிந்துட மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. வெற்றிவாகை சூடி கடுகு சிறுத்தாலும் காரம் போகாது எனும் பழமொழிக்கேற்ப நம் தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்துத்தந்த சிறுவன் ராகவேந்திரனுக்கும் அவரை பிள்ளையாய் அடையப்பெற்ற பெற்றோருக்கும், வெற்றிக்கு துணையாய் நின்ற பயிர்ச்சியாளருக்கும் இன்னும் உலகளவிலும் சாதனைகள் பல புரிந்திட என் மனம் நிறைவான வாழ்த்துக்கள்.

    இச்செய்தியை உலகறியச்செய்த அதிரை நியூஸிர்க்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கராத்தேவில் வெற்றி பெற்ற ராஹவேந்திரனுக்கு எங்களின் மனமாரந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  7. இந்த சிறு வயதிலியே சாதனை படைத்த ராஹவேந்திரனுக்கு எனது பாராட்டுக்கள் இப்படி சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அந்த சிறுவனின் பெற்றோருக்கும் பயிற்சியாளர் சண்முகராஜ் அவர்களுக்கு எனது முதல் சல்யூட்.

    இன்னும் பல சாதனை படைத்து தாய் மண்ணுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

    இன்னும் நீ உலகச்சாதனை படைக்க காலம் வெகுத்தூரம் இல்லை.

    ReplyDelete
  8. Congradulations Ragavendra keep it up. Work hard to become internationally famous to make your parents and our country to be proud of you.

    ReplyDelete
  9. கராத்தேவில் வெற்றி பெற்ற ராஹவேந்திரனுக்கு எனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    சாதனை புரிந்து வீட்டிற்கும் - நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வெற்றி பெற்ற இளஞ்சிங்கம் ராகவேந்தர் மற்றும் இவ்விளஞ்சிங்கத்திற்கு ஊக்கமளித்த அவரின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்க்கும் என் உளம்நிறைவான வாழ்த்துகள்!

    அடிப்படையிலேயே சிறந்த தற்காப்புப் பயிற்சியில் வென்று விட்ட இச்சிறுவர், உறுதியாக எதிர்காலத்தில் நிரம்ப சாதித்து, நாட்டின் காவல்பணி, பாதுகாப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பெயருடன் விளங்குவார் என்பது என் கணிப்பு ஆகும்.

    வாழ்க வளமுடன்
    சூழ்க பலமுடன்

    ReplyDelete
  11. கராத்தேவில் வெற்றி பெற்ற ராஹவேந்திரனுக்கு எனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    சாதனை புரிந்து வீட்டிற்கும் - நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள்ளும் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சாதனை சிறுவன் ராகவேந்திரனுக்கும். ஊக்குவித்த பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. Congradulations Ragavendra keep it up. Work hard to become internationally famous to make your parents and our country to be proud of you.

    ReplyDelete
  14. Congradulations Ragavendra keep it up. Work hard to become internationally famous to make your parents and our country to be proud of you.

    ReplyDelete
  15. Congradulations Ragavendra keep it up. Work hard to become internationally famous to make your parents and our country to be proud of you.

    ReplyDelete
  16. Congradulations Ragavendra keep it up. Work hard to become internationally famous to make your parents and our country to be proud of you.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.