.

Pages

Tuesday, May 14, 2013

'அதிரை நியூஸ்' செய்தி எதிரொலி பழுதடைந்த மின்கம்பம் மாற்றியமைப்பு !

மேலத்தெரு மகிழங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள சண்முகம் டீ கடை அருகில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் இருந்தது. இந்த கம்பத்தில் 10க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தன.

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த [ 17-02-2013 ] அன்று தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது மற்றும் இந்தப்பகுதியின் 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களிடமும் வேண்டுகோள் விடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று [ 14-05-2013 ] காலை கீழே விழும் நிலையில் இருந்த பழைய போஸ்ட் மரத்தை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் புதிய போஸ்ட் மரம் நடப்பட்டது. இதனால் இந்தப்பகுதியில் சுமார் 1-1/2 மணி நேரம் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.

துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிரை மின்சார வாரிய அலுவலர் AE பிரகாஷ் மற்றும் அதன் ஊழியர்கள், அதோடு மட்டுமல்லாமல் இவற்றை மின்சார வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது, 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
[ போஸ்ட் மரம் - பழையது ]

[ போஸ்ட் மரம் புதியது ]

8 comments:

  1. செய்திகள் வெளியிட்டு உடனே தீர்வுக்கு வழி வகுத்த சமூக ஆர்வலர் ஜமால் காக்கா அவர்களுக்கும்,மின்சார அலுவலர்கள்,ஊழியர்களுக்கும் மற்றும் இச்செய்தி கொண்டு சென்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு நாளும் அஞ்சிக்கொண்டிருந்த இந்த மின்கம்ப செய்தியை தளத்தில் பதிந்து கவனத்திற்கு கொண்டு வந்த அதிரை நியூஸ்சிற்க்கும் உடனே துரித நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தை மாற்ற உதவி செய்த மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிற்க்கும், இதற்க்கு உதவியாய் இருந்து செயல்பட்ட 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களுக்கும், உடனே சுணங்காமல் புதிய மின்கம்பத்தை மாற்றி கொடுத்த அதிரை மின்வாரியத்திற்கும்,எனது மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. இதில் ஊருதுணையாக நின்ற அனைவருக்கும் என மனமார்த
    நன்றி.....

    ReplyDelete
  4. அதிரை நியூஸ்யில் பதிந்த உடனை சரிசெய்யபட்டது மின் கம்பம் ஜமால் காக்கா துணையுடன். அதிரை நியூஸ்க்கும் ஜமால் காக்காவிற்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    பல தடவைகள் தொலைபேசியில் மற்றும் நேரிலும் சென்று கோரிக்கைகளை விடாது புதுபித்துக்கொண்டது, நேற்று சி.எம்.பி. லைனில் ட்ரான்ஸ்பார்மர் வேலை நடந்து முடிந்த கையேடு திரு பிரகாஷ் எ.இ. அவர்களை மீண்டும் கனிவோடு ஞாபகப்படுத்தியது.

    இன்று இந்த பலன். இனி என்ன செய்யணும் சொல்லுங்கள், இனிமேல் எதுவும் தாமதம் ஆகாது.

    என்னதான் இருந்தாலும் நேரம் வரணும், அதுதான் இந்த நேரம், அதாவது நேரம் என்றால் நல்லது அல்லது கேட்டது கிடையாது, இறைவனால் தீர்மானிக்கப்பட்ட நேரம்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. மின் வாரிய எ.இ திரு பிரகாஷ்க்கும், ஊழியர்களுக்கும் ஒரு சபாஷ் மற்றும் உதவி செய்த ஜமால் காக்காக்கு ஒரு தேங்க்ஸ்

    ReplyDelete
  7. இந்த மின்கம்பத்தை மாற்ற உதவி செய்த மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிற்க்கும், இதற்க்கு உதவியாய் இருந்து செயல்பட்ட 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களுக்கும், உடனே சுணங்காமல் புதிய மின்கம்பத்தை மாற்றி கொடுத்த அதிரை மின்வாரியத்திற்கும்,எனது மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.



    ReplyDelete
  8. இந்த மின்கம்பத்தை மாற்ற உதவி செய்த மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிற்க்கும், இதற்க்கு உதவியாய் இருந்து செயல்பட்ட 16-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் அவர்களுக்கும், உடனே சுணங்காமல் புதிய மின்கம்பத்தை மாற்றி கொடுத்த அதிரை மின்வாரியத்திற்கும்,எனது மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக்கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.