கடந்த [ 11-05-2013 ] அன்று பகல் 2.30 மணியளவில்‘டமார்’ என்ற சத்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதனால் இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர். துரித நடவடிக்கையாக உடன் களத்தில் இறங்கிய அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தகவலறிந்த அதிரை மின்சார வாரியம் அன்றைய தினம் தற்காலிக மின் இணைப்பை வழங்கினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணி முதல் டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிரான்ஸ்பார்மரின் பளுவை குறைப்பதற்காக கூடுதல் பீடர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மின் கம்பிகளும் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்தப்பகுதியில் பழுதடைந்துள்ள பெரும்பாலான போஸ்ட் மரங்களில் பராமரிப்பும் செய்து வருகின்றனர்.
மனித உரிமை ஆர்வலர் KMA. ஜமால் முஹம்மது, SAC. இர்பானுத்தீன் ஆகியோரோடு அஹமது மொய்தீன் அவர்களும் கூடவே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிரை மின்சார வாரிய அலுவலர் AE பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது, SAC. இர்பானுத்தீன், அஹமது மொய்தீன் உள்ளிட்ட சி.எம்.பி லைன் மஹல்லாவாசிகள் அனைவரும் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
உடன் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள உடனிருந்து உதவிய மச்சான் KMA ஜமால் முஹம்மத், தம்பி SAC இர்ஃபானுதீன் மற்றும் சகோதரர் அஹ்மத் முஹைதீன் ஆகியோர்க்கு என் உளம் நிறைவான நன்றிகள்.
ReplyDeleteஇதுபோல் எங்கள் தெரு சானாவயல் சண்முகம் டீக்கடைக்கு அருகில் அபாயகரமாக சாய்ந்து நிற்கும் மின்கம்ப மரத்தை சரிசெய்து கொடுத்தால் சந்தோசமாக இருக்கும். செய்வார்களா..?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDelete//இதுபோல் எங்கள் தெரு சானாவயல் சண்முகம் டீக்கடைக்கு அருகில் அபாயகரமாக சாய்ந்து நிற்கும் மின்கம்ப மரத்தை சரிசெய்து கொடுத்தால் சந்தோசமாக இருக்கும். செய்வார்களா..?//
சகோ மெய்சா அவர்களுக்கு, இன்று தேதி 14/05/2013 இம்மாத இறுதிக்குள் உங்கள் ஆசை இன்ஷா அல்லாஹ் நிறைவேறிவிடும்.
கடும்முயர்ச்சிக்குப்பின் நேற்று ஒருவழியாக அந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் பளுவை குறைத்து அதாவது மும்முனை மின் கம்பிகளில் ஏற்கனவே மேற்கு பக்கம் ஒன்று, கிழக்கு பக்கம் ஓன்று ஆக இரண்டு பியூஸ் கண்ட்ரோல் இருந்ததை தற்போது கிழக்கு பக்கம் மேலும் ஒரு புதிய பியூஸ் கண்ட்ரோல் வைத்து ஆக மொத்தம் மூன்று கண்ட்ரோலாக மாற்றி மேலும் கூடுதலான மின் கம்பிகளையும் அமைத்து சரி செய்து விட்டதால் இனி பியூஸ் போறது குறைந்துவிடும்.
தமிழகத்தில் உள்ள அதிரை மின்வாரிய உதவி பொறியியல் அதிகாரி திரு பிரகாஷ் அவர்கள், தலைமை போர்மேன் திரு சதாசிவம் அவர்கள், லைன்மேன் திரு ரவி அவர்கள் இவர்களோடு ஏனைய ஊழியர்கள், ஆக மொத்தம் பத்து பேர்கொண்ட குழு நேற்று காலை 9.30 மணிக்கு வந்து பணி தொடங்கி இரவு சரியாக 9.10 மணிக்கு பணி பூர்த்தியாகி மின் சப்ளை கொடுத்துவிட்டு போனார்கள். கடுமையாக பாடுபட்ட மின் வாரிய அலுவலர்கள் ஊழியர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஒரு பக்கம் பொதுமக்கள், மறு பக்கம் வருவோர் போவோர், இன்னொரு பக்கம் நமது துடிப்புள்ள இளைஞர்கள் இவர்களுக்கு மத்தியில் நேற்று சூரியன் ஒய்வு எடுத்து விட்டான் போலும் ஒரே மந்தாரமாக இருந்தது வேலை செய்யவும் இலகுவாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக வல்ல நாயனின் மிகுந்த கிருபையோடும் பாதுகாப்போடும் வேலை நேர்த்தியாக முடிந்தது.
மின் வாரிய ஊழியர்களுக்கு பகல் உணவு, டீ, குடிதண்ணீர் இவைகள் அனைத்தும் அப்பகுதி மக்களால் வழங்கப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
//
ReplyDeleteசகோ மெய்சா அவர்களுக்கு, இன்று தேதி 14/05/2013 இம்மாத இறுதிக்குள் உங்கள் ஆசை இன்ஷா அல்லாஹ் நிறைவேறிவிடும்//
மிக்க நன்றி மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கா அவர்களே.! காலம் தாழ்த்தாமல் இதை உடனே செய்வீர்கள் என்று நம்புகிறேன். மாற்று மின்கம்பம் வந்து இன்னும் மாற்றிவைக்காமல் கிடக்கிறது.ஏன் என்று தெரியவில்லை.
இன்ஷா அல்லாஹ்.....
ReplyDeleteமின் வாரிய ஊழியர்களுக்கு நன்றிகள்.
ReplyDelete