.

Pages

Sunday, September 22, 2013

அரசு நிலத்தில் திடீர் குடிசைகளால் பரப்பரப்பு !

அதிரை பிலால் நகர் ஈசிஆர் சாலையை ஒட்டி சின்ன ஏரி என்றழைக்கப்படும் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரி இப்பகுதியை சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்கி வருகின்றன. இதன் வடிகால் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட இந்த நிலம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி தரிசாக காணப்பட்டு வந்தன.

இந்த நிலத்தில் நேற்று நள்ளிரவில் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் திடிரென்று திரண்டு வந்து குடிசைகளைப்போட்டு குடியமர்ந்து விட்டனர். 35 க்கும் மேற்பட்ட திடீர் குடிசைகளால் அந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.

தகவலறிந்த ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.





 

2 comments:

  1. ஏன் என்ன எதற்கு இந்த திடீர் முடிவு மக்களுக்கு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மக்களே!

    மனிதனின் அத்தியாவசிய தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். உணவும் உடையும் அநேகமாக எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறது. பஞ்ச காலத்தில்
    ஒருவன் உணவை பதுக்குகிறான் என்றால் அவனை கொல்லவும் மக்கள் துணிந்து விடுவர். அல்லது அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்.

    ஆனால், உறைவிடத்தைப் பொருத்தவரை அது எல்லோராலும் முடியாது, ஏன் ஐடிதுறையில் வேலை செய்தாலும் எட்டு மணிநேரம் மின்சாரம் கூட இல்லாத ஊரில் 10 இலட்சத்தில் கூட காணி நிலம் கிடைக்கவிடாமல் செய்துவருகின்றனர் காலான்களாக பெருகிவிட்ட "நடுத்தரவர்க்கத்து மனை மாபியாக்கள்".

    வாழ்நாளில் இவ்வூரில் இருப்பிடம் ஒன்றை அடையவே முடியாது என்கிற கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த ஏழைகள் அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடிபுகுதல் வரவேற்கத்தக்கதே. அரசு தகுதியுடையோர்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்.

    ஏனுங்கோ, உங்களுடைய மூத்தி*** பார்சல் செய்து ஏரோப்பிளேன்ல அனுப்பிவையுங்கோ, வெளிநாட்டில் இளமையை தொலைத்து இந்த வீட்டு மனைகளுக்காக வாழ்வை அற்பணித்துள்ள நிறையபேர் குடிக்கவேண்டியிருக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.