கடந்த பத்து நாட்களாக இந்த அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டணம் செலுத்தும் அறை பூட்டியே காணப்படுகிறது. அதன அருகில் 'தொலைப்பேசி கட்டணம் செலுத்த இயலாது தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்ற அறிவிப்பு பலகையும் இடம்பெற்றுள்ளது. கட்டணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களிடம் பட்டுக்கோட்டை அலுவலகத்தில் சென்று கட்டணத்தை செலுத்த சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கிராமப்பகுதியில் வசிக்கும் ஒருவர் 110 ரூபாய் கட்டணத்தை கட்டுவதற்காக அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு 20 ரூபாயை கூடுதலாக செலவழித்துக்கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று மட்டுமல்ல அவர்களுக்கு பெறும் அலைச்சலையும் அவதியையும் ஏற்படுத்தி விடும். ஏற்கனவே பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் நகரில் கோலோச்சி வரும் சூழலில் இது போன்ற மக்கள் பாதிப்படையும் மாற்றத்தை திடிரென்று கொண்டுவந்தால் அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள BSNL தனது வாடிக்கையாளர்களை மேலும் இழக்க நேரிடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து BSNL தொலைதொடர்பு அலுவலக வட்டத்தில் விசாரித்த வகையில்...
ஊழியர் பற்றாக்குறையால் காலதாமதமாகிறது என்றும் இன்னும் ஒரு சில தினங்களில் அலுவலகர் நியமிக்கப்படுவார் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
அதிரை நியூஸ் குழு
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நியாயமான பதிவு. இன்னும் சில தினங்கள் பொறுத்து இருந்து பாப்போம், சரியாக வரவில்லையானால் நம்முடைய கச்சேரியை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை