திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் வீட்டை ஒட்டி மலர் என்பவரது வீடு உள்ளது.
அவர் வீட்டிலிருந்து புகைவது கண்டு அலறி அடித்து கொண்டு மும்தாஜ் ரோட்டுக்கு ஓடி வந்தார். அப்பொழுது மலர் வீட்டில் இல்லாததால் மலர் வீட்டில் பிடித்த தீ பரவி அருகே இருந்த வீடுகளில் தீ பிடித்து எரிய துவங்கியது.
இதனை கண்ட பொது மக்கள் தீயை அனைக்க போராடினர். புகை மண்டலமாக அப்பகுதி காட்சி அளித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை தீ அனைப்பு வீரர்கள் வந்து தீயை போராடி அனைத்தனர்.
மேலும் பரவாமல் இருக்க அருகே இருந்த வீடுகளில் மீதும் தண்ணீர் அடித்தனர். இதில் முகம்மது மைதீன்(59), மும்தாஜ் பேகம்(30), மலர்(35), சேக் முகைதீன்(35) ஆகியோரது நான்கு வீடுகளும் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகின. வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது.
சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி பாஸ்கரன். இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிங்கராவேல் ஆகியோர் பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டனர்
Adirai news rompa rompa n'alla news pargka.... Parugka parththu ketdea erugka. Adirai sutru. Vatdara anaiththu news areya ethu thagka eppa...epavea suda.....ssufa
ReplyDeleteவீடு இழந்தோருக்கு தக்க தன்மானம் அரசு இடம் பெற முத்துப்பேட்டை வாசிகள் முயற்சி செய்யவேண்டும்.
ReplyDelete