.

Pages

Sunday, September 29, 2013

முத்துப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ! வீடுகள் எரிந்து முற்றிலும் நாசம்.!

தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் வீட்டை ஒட்டி மலர் என்பவரது வீடு உள்ளது.

அவர் வீட்டிலிருந்து புகைவது கண்டு அலறி அடித்து கொண்டு மும்தாஜ் ரோட்டுக்கு ஓடி வந்தார். அப்பொழுது மலர் வீட்டில் இல்லாததால் மலர் வீட்டில் பிடித்த தீ பரவி அருகே இருந்த வீடுகளில் தீ பிடித்து எரிய துவங்கியது.

இதனை கண்ட பொது மக்கள் தீயை அனைக்க போராடினர். புகை மண்டலமாக அப்பகுதி காட்சி அளித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை தீ அனைப்பு வீரர்கள் வந்து தீயை போராடி அனைத்தனர்.

மேலும் பரவாமல் இருக்க அருகே இருந்த வீடுகளில் மீதும் தண்ணீர் அடித்தனர். இதில் முகம்மது மைதீன்(59), மும்தாஜ் பேகம்(30), மலர்(35), சேக் முகைதீன்(35) ஆகியோரது நான்கு வீடுகளும் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகின. வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது.

சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி பாஸ்கரன். இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிங்கராவேல் ஆகியோர் பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டனர்

 
 
நன்றி நக்கீரன்

2 comments:

  1. Adirai news rompa rompa n'alla news pargka.... Parugka parththu ketdea erugka. Adirai sutru. Vatdara anaiththu news areya ethu thagka eppa...epavea suda.....ssufa

    ReplyDelete
  2. வீடு இழந்தோருக்கு தக்க தன்மானம் அரசு இடம் பெற முத்துப்பேட்டை வாசிகள் முயற்சி செய்யவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.