.

Pages

Thursday, September 5, 2013

அதிரையில் தி.மு.க நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் !

அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை மற்றும் சி.எம்.பி லைனிலிருந்து நடுவிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலை ஆகியவற்றை மறு சீரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையிலும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், நகர செயலாளர் இராம. குணசேகரன், மகிழங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் சுப்புமாறன், தொக்காளிக்காடு ஊராட்சித்தலைவர் மணிவாசகம், மழவேனிற்காடு ஊராட்சித்தலைவர் மல்லிகா மணியரசர் மற்றும் தி.மு.க நகர நிர்வாகிகள், தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.






4 comments:

  1. ஆலுக்கு ஆலூ போட்டி போட்டு கொண்டு எப்படிவாது காரியம் நடந்தால் சரிதானே.

    ReplyDelete
  2. ரயில்ச் சாலையை அகலமாய் சீக்கிரம் புதுப்பித்து ரெயிலு ஓட எப்ப போராட்டம் செய்யப் போறீங்க?

    ReplyDelete
  3. போராட்டம் வெற்றியடைந்து எப்படியாவது இந்த சாலைக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.