.

Pages

Sunday, September 15, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வணிகவியல் அமைப்புக்குழு துவக்கம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நேற்று [ 14-09-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் அரங்கில்  நடைபெற்ற விழாவில் புதிதாக துவங்கிய வணிகவியல் அமைப்புக்குழுவின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் A. ஜலால் அவர்கள் தலைமை ஏற்க, வணிகவியல் துறைத்தலைவர் P. சிலார் முஹம்மது முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக பேராசிரியர் M. நாசர் அவர்கள் கலந்துகொண்டார். அறிமுக உரையை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் S. நக்கீரன் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக வணிகவியல் அமைப்புக்குழுவின் மாணவத் தலைவர் M. நியாஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்த, அதன் செயலாளர் S. மர்ஜூக் அஹமது நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2 comments:

  1. இந்த அமைப்பு துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன? இந்தப் பகுதியில் வசிக்கும் வணிகர்களுக்கு அவர்களின் தொழிலை முன்னேற்றுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்போறாங்களா? இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சிறு குறு தொழில் தொடங்க உதவப்போகிறதா?

    அல்லது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மாதிரி இதுவும் ஒன்றா?

    தகவல் ஒன்றுமில்லாமல் இப்படி மொட்டையா ஒரு பதிவிடுவதை விட பேஸ்புக்கில் புகைப்படங்களை இட்டால் ஓட்டிவிடலாம்....

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.