.

Pages

Sunday, September 15, 2013

அதிரை ஈசிஆர் சாலையில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் !

இன்று காலை 10.30 மணியளவில் அதிரை பிலால் நகர் ஈசிஆர் சாலையில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

அதிரை பிலால் நகரைச் சார்ந்தவர் மாலிக். இன்று நடைபெற உள்ள அவரின் திருமணத்திற்காக ஈசிஆர் சாலையில் உள்ள அவரதுவீட்டிலிருந்து  வாகனமொன்றில் ஏறி நண்பர்களுடன் திருமண மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது செய்னாங் குளத்தின் கழிவுகளை அள்ளிக்கொண்டு வந்த ட்ராக்டர் எதிரே வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தன. மேலும் வாகனத்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த அவரது நண்பர் அபூதாகிர் மீது மோதியதில் காயங்கள் ஏற்பட்டன. உடனே அருகில் நின்றவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.






2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. ECR சாலையில் வேகமாக செல்வதை தவிர்க்கவும்.
    இச்சம்பவத்தை பார்த்தும் நாம் திருந்த வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.