மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழாண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் எந்த கல்வி நிலையத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டப்படி 25 சதவீத இலவச இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சித் தலைவர் கே.எம். சரீப் தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அதிரை AJ. ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலர் குழ. பால்ராசு போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி பொதுச் செயலர் ஏ.வி. அப்துல் நாசர், அவைத் தலைவர் வேங்கை சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மேம்பாலம் அருகேயுள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்ட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட ஒன்றியத்தலைவர் B.பஷீர் அவர்களின் தலைமையில் 120 க்கும் மேற்பட்ட அதிரையர் கலந்துகொண்டனர்.
எங்க ஜி கலந்து கொண்ட ஆர்ப்பாட்டாத்தை நீங்க எப்படி 'மாபெரும்' என்கிற வார்த்தையை விடுவது. ஊரில் நடைபெற்றால்தான் 'மாபெரும்' போடுவதாக ஏதாவது உறுதிமொழி எடுத்திருக்கீங்களா?
ReplyDeleteAnna achche thalaiva ugka katchche umar thampeyai kanom. Negla makkalukku kodiththa vakkuruthe Anna aachchu 1 mainroad sarayakkadai vesayam .umarthampe hageyarai munnelai paduththugko demekke koduppar
ReplyDelete