.

Pages

Sunday, September 29, 2013

TMJK கட்சியினர் நடத்திய ஆர்பாட்டாத்தில் அதிரையர் பங்கேற்பு !

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழாண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் எந்த கல்வி நிலையத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டப்படி 25 சதவீத இலவச இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சித் தலைவர் கே.எம். சரீப் தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அதிரை AJ. ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலர் குழ. பால்ராசு போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி பொதுச் செயலர் ஏ.வி. அப்துல் நாசர், அவைத் தலைவர் வேங்கை சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மேம்பாலம் அருகேயுள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்ட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட ஒன்றியத்தலைவர் B.பஷீர் அவர்களின் தலைமையில் 120 க்கும் மேற்பட்ட அதிரையர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. எங்க ஜி கலந்து கொண்ட ஆர்ப்பாட்டாத்தை நீங்க எப்படி 'மாபெரும்' என்கிற வார்த்தையை விடுவது. ஊரில் நடைபெற்றால்தான் 'மாபெரும்' போடுவதாக ஏதாவது உறுதிமொழி எடுத்திருக்கீங்களா?

    ReplyDelete
  2. Anna achche thalaiva ugka katchche umar thampeyai kanom. Negla makkalukku kodiththa vakkuruthe Anna aachchu 1 mainroad sarayakkadai vesayam .umarthampe hageyarai munnelai paduththugko demekke koduppar

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.