அதிரை பைத்துல்மாலில் இன்று மாலை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தின்போது ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை தக்வா பள்ளியின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாதனத்தை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து தக்வா பள்ளியின் டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர், நிர்வாக உறுப்பினர் மஜீத் ஆகியோர் பெற்றுச்சென்றனர்.
இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.
இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.