ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்றாக இருந்தது. இந்த கட்டிட பணிக்காக நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்கள் தனக்கு சொந்தமாக உள்ள [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
அரசு இந்த கட்டுமானப் பணிக்காக ஆரம்பத்தில் ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரூபாய் 55 லட்சம் மதிப்பிட்டில் கட்டிடம் கட்டுவதற்குரிய பணியை இன்று காலை முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மூன்று மாத கால அவகாசத்தில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப்பணிகளுக்காக ஊழியர்கள் தங்குவதற்காக அதன் அருகே குடிசைகளும் போடப்பட்டுள்ளன.
இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் அரசு அலுவலர் கருணாகரன், பொறியாளர் கர்ணன், ஜஹபர் அலி, பிரின்ஸ் ராவுத்தர், பத்திர எழுத்தர் ராஜூ, சம்சுதீன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போது சார்பதிவாளர் அலுவலகம் அதிரை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில்தான் பல ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.......மேலும் ஊருக்கு மத்தியில் உள்ள யானையன் குளம் போன்றவற்றின் ஒருபகுதியை தூற்று விட்டு இதுபோன்ற அரசு அலுவலகங்கள் வரும்பட்சத்தில் மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நமதூரின் பாதி மக்களுக்கு உரிய VAO அலுவலகம் இங்கு இடவசதி இல்லாமல் ஏறிப்புறக்கரையில் இயங்கி வருகின்றது, அதை மீண்டும் இங்கு மாற்ற ஏதும் வழிகள் உண்டா?
அடேங்கப்பா இவ்வளவு தூரத்திலா? கேஸ் கம்பெனிக்கு போய்வரவே மூச்சு வாரி இறைகின்றது, இது போதாகுறைக்கு...........................!!??
ஊருக்கு மத்தியில் இருப்பது நல்லது.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
எல்லாதிற்கும் அதிரை முஸ்லிம்கள். ஏமாளிகள் ?
ReplyDeleteகாரணம் அதிரைல் முக்கால் வாசி அரசு அலுவலங்கலுக்கு நிலம் நம்மவர்ஹளால் இலவசமாக கொடுக்கப்பட்டது .
ஆனால் முக்கால்வாசி அன்பவிப்பது யாரோ !
அரசால் கட்டப்பட்ட சமுக கூடம். இன்று கோவில் சொத்து !
நமது இடத்தில உள்ள அல் அமீன் பள்ளிக்கு ஆயிரம் இடைஞ்சல்கள் !
வள்ளல்களே கொஞ்சம் சிந்திபீர்