.

Pages

Monday, February 17, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை !

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கிடையேயான உலக தடகள திறனாய்வு போட்டி திருவாரூர் விளையாட்டு அரங்கில் கடந்த 13.02.2014 மற்றும் 14.02.2014 வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன.

அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகின்ற இந்த போட்டியானது 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வரகின்றவர்களுக்கு விளையாட்டு மேம்படுத்தி மாணவர்களை ஊக்கவிப்பதற்காக தலா ரூபாய் 6000 வழங்கியுள்ளார்கள். இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றனர்.

1. பி. முத்துராசு 8 ம் வகுப்பு  400 மீட்டர் முதல் இடம்
2. எச். பயாஸ் அகமது  8ம் வகுப்பு 200 மீட்டர் 5ம் இடம்
3. ஏ. அஜ்மல் கான் 6ம் வகுப்பு 100 மீட்டர் 6 வது இடம்

நம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜனாப் செய்யது முஹம்மது  புஹாரி மற்றும செயலாளர் தமீம் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்கள்.

உதவி தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரிய ஆசிரியைகள்  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான திருவாளர்கள்  ராஜா, ஜெயகாந்தன் மற்றும் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் பாராட்டை பெற்றனர்.




3 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.
    பாராட்டுக்கள் வெற்றி பெற்ற மாணவர்கள் மேம்மேலும் வெற்றி பெற வாழ்த்து கிறோம் .

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!

    இந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு இன்னும் விளையாட்டுத்துறையில் வளர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த விளையாட்டுதுறை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.