.

Pages

Wednesday, February 26, 2014

பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் கோப்பையை தட்டிச்சென்றது கடற்கரைதெரு அணி !

அதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ BSC ] சார்பில் சுழற்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த தொடரில் அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்று தனித்திறமையை நிருபித்து வந்தனர். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிலால் நகர் அணியினரும் [ BSC ] , கடற்கரைதெரு அணியினரும் [ ABCC ] மோதினர்.

முன்னதாக டாஸ் வென்ற பிலால் நகர் அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கடுமையாக மோதினர். ஆட்டத்தின் இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்கரைதெரு அணியினர் [ 68/3 ] 17 ரன்கள் வித்தியாசத்தில் பிலால் நகர் அணியை வென்றனர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'சமூக ஆர்வலர்' அஜ்மல்கான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற கடற்கரை தெரு அணியினர் மற்றும் பிலால் நகர் அணியினருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

ஆட்டத்தின் நாயகனாக கடற்கரைதெரு அணியை சேர்ந்த அஹமது சேக் அலாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.






4 comments:

  1. வெற்றி பெற்ற அணியினருக்கும், வெற்றியை நழுவவிட்ட அணியினருக்கும் வாழ்த்துக்கள்

    AFCC அணி சார்பாக - இர்ஃபான்

    ReplyDelete
  2. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ BSC ] சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று நமது தெருவிற்கு (கடற்கரைதெரு) பெறுமை சேர்த்து தந்த அணைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.