.

Pages

Sunday, February 16, 2014

அதிரை லியோ மாவட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விருதுகள் வழங்கி கெளரவிப்பு !

இன்று காலை அதிரையில் நடைபெற்ற லியோ மாவட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய சமூக ஆர்வலர்களுக்கு சேவை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு  நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியரும், லியோ சங்க மாவட்ட தலைவருமாகிய மேஜர் முனைவர் கணபதி தலைமை வகித்தார். லயன் சங்க மாவட்ட ஆளுநர் சண்முக வேல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய சமூக ஆர்வலர்களுக்கு சேவை விருதுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 'பைந்தமிழ் காவலர் விருது' அதிரை கவிஞர் முஹம்மது தாஹா, 'சேவைசெம்மல் விருது' டாக்டர் அமீர் சுல்தான், 'இளம் நாடக கலைமணி விருது' ரெங்கராஜ் ஆகியோர் பெற்றனர். இதையடுத்து லியோ சங்கங்களின் கூட்டு மாவட்ட தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளின் லியோ சங்க மாணவ மாணவிகள் பங்கேற்று, கலை நிகழ்சிகளை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறந்த சேவை புரிந்ததற்காக லயன் சங்க அதிரை நகர தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கல்லூரிகளின் லியோ சங்கத்தினர்கள் விருதுகளை பெற்றுச்சென்றனர்.

முன்னதாக லயன் சங்க செயலாண்மைகுழு தலைவர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் லயன் சங்க செயலாண்மைகுழு செயலாளர் ராமமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த லயன் சங்க நிர்வாகிகள், லியோ சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.











No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.