.

Pages

Sunday, February 9, 2014

அதிரை நியூஸிடம் மனம்திறந்த அதிரை பேரூராட்சித் தலைவர் [ காணொளி ]

அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பெரும்பாலானோர் வெளிப்படையாக அறிந்திராத வேளையில் இவரின் வருகைக்கு பிறகு அனைத்து பணிகளும் ஒளிவு மறைவின்றி நடைபெறுவதையும், நகர வளர்ச்சி பணிகளில் பெரும்பாலான நேரங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் ஆர்வமாக செயல்படுவதையும் இவருடைய ஆதரவாளர்கள் பெருமையுடன் கூறி வந்தது உண்மைதான் என நிருபிக்கும் விதமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடனான நமது நேர்காணலில் பெறப்பட்ட பதிலில் வெளிப்பட்டது.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் அதிரையில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு சுய தொழில் தொடங்க தேவையான இடங்கள், பேரூராட்சி மூலம் எடுத்து செய்யக்கூடிய வேலைகள் ஆகியன தொடர்பாக பேரூராட்சியின் சார்பாக ஆண்டுதோறும் விடப்படும் டெண்டர் முறை குறித்தும், பேரூராட்சியின் பேருந்து நிலைய கடைகளின் பெரும்பாலான கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற நிலையில் அதன் டெண்டர் நிலவரம் குறித்தும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்.

இதோ அவருடைய பதில்...

13 comments:

  1. சிறப்பான பேட்டி சிறப்பான பதில் வாழ்த்துக்கள் [காலையில தொறந்து மாலையில சாத்துரத்துக்காக கடைய வாடகைக்கு எடுத்துராதீங்க சூப்பர்] போட்டி ஆரோக்கியமான வியாபாரமாகும்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நமது சேர்மன் சகோ அஹ்மது அஸ்லம் அவர்களின் இந்த பொன்னான சேவை எல்லோருக்கும் தேவை.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. பேரூராட்சி தலைவர் அவர்கள் மனம்திறந்து அளித்த பேட்டி. இது அவர் கறைபடியாதவர் என்பதை நிரூபிக்கக்கூடிய பேட்டி. எவ்வளவோ இடையூறுகள் இருந்தாலும், பதவியை துஷ்பிரயோகம் பண்ணாதவரை மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கும். இறைவனின் உதவியும் நிச்சயம் இருக்கும். அவருடைய பணியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பெரும்பாலனவர்கள் பேரூராட்சி தலைவர் அவர்களை உளமார பாராட்டுகிறார்கள் அதே நேரத்தில் நிதானம் தேவை என்பதையும் வலியுறுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, கடைத்தெரு தீவைப்பு விஷயத்தில் தன்னிச்சையாக சென்றதால், கோர்ட் கேஸ் என்றாகிவிட்டது. இதையே ஊர் முக்கியஸ்தர்கள், கட்சிகாரர்கள், கவுன்சிலர்கள் சூழ சென்றிருந்தால் இந்த கேஸ் விஷயத்தை தவிர்த்திருக்கலாம். பொய் கேஸ் போட்டவரை இவர்கள் சும்மா விட்டிருக்க மாட்டார்கள். நடந்தவரை சரி, இனி வரும் காலங்களிலாவது அனுசரித்து, பொறுமையுடன் பிரச்சனைகளை கையாண்டால், இவரை மிஞ்ச யாரும் இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  5. இவர் எடுக்கும் அவசர முடிவுகளும், சக கட்சியினர், அதிகார வர்க்கத்தினர், அலுவலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களை அரவணைத்து செல்லாதாதையும், நகர வளர்ச்சிக்காக அரசு, அலுவலக வட்டத்தில் இலகுவான அணுகுமுறையை கடைபிடித்து திட்ட பணிகளுக்கு வேண்டிய நிதிகளை பெற முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.

    அதிரை நியூஸ் இதற்கு பதில் வாங்கி பதியவும்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் சண்முகம் அவர்கள் சொல்லும் அரவணைப்பு எப்படி, ஊழலுக்கு துணை போவதா அல்லது வேறு மாதிரியா, விளக்கமாக எழுதினால் பேரூராட்சி தலைவரே பதில் தருவாரே!.

      Delete
  6. டெண்டர் சம்பம்பந்தமாக நல்ல விளக்கம். போட்டியில் திறமைசாலிகள் நேர்மையானவர்கள் இவர்களுக்கும் இடமுண்டு என்பது தெரிகின்றது.

    ReplyDelete
  7. சிறப்பான பேட்டி, வாழ்த்துக்கள். சாகுல் காக்காவின் அதிகப்பிரசிங்கித்தனமான முன்னுரையை எடிட் செய்திருக்கலாம்.

    ReplyDelete
  8. Thambe maher sonna yosanai uk thoppe pola e l l a...



    he heeeee heeeeheeee

    ReplyDelete
  9. நமதூரில் சிலர் பொழுதுபோக்கிற்காக தொழில் நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல வெளிநாட்டில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு வந்து அடுத்த நாடு போகும் வரை தொழில் நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்கு கடைகள் கொடுப்பதை விட, உள்ளுரில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு தொழில் தொடங்க முன்னுரிமை கொடுக்கலாம்,

    ReplyDelete
  10. பேரூராட்சித்தலைவர் மக்களுக்கு வழங்கிய ஆலோசனை அருமை. நல்லதொரு விழிப்புணர்வை எத்திவைத்துள்ளார்.சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சகோதரர் சண்முகம் அவர்கள் சொல்லும் அரவணைப்பு எப்படி, ஊழலுக்கு துணை போவதா அல்லது வேறு மாதிரியா, விளக்கமாக எழுதினால் பேரூராட்சி தலைவரே பதில் தருவாரே!.

    ReplyDelete
  12. Br Maahir avarkalaiye petti edukka sollalaame!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.