இன்று மாலை இவர்கள் இருவரும் தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பயணமானார்கள். வண்டிப்பேட்டை அருகே கடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிகொண்டனர். இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் நின்றவர்கள் த.மு.மு.க ஆம்புலன்ஸை வரவழைத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை மேற்கொண்டு வரும் இருவரையும் த.மு.மு.க வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞர் காங்கிரஸ் பட்டுக்கோட்டை வட்டாரத்தலைவர் அதிரை மைதீன் ஆகியோர் உடனிருந்து கவனித்து வந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிராம்பட்டினத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடை பெற்றுவருகிறது. மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த வாகன விபத்து நடைபெற்று உள்ளது. விபத்தில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு முதல் உதவி செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனோடு பெரிய அளவில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கான எந்த வசதிகளும் அரசு மருத்துவமனையில் இல்லை. இவ்வசதிகளை பெறுவதற்கு பெரிய அதிகாரிகள் சிபாரிசு செய்து உடனடியாக அவ்வசதிகளை பெற அதிகாரிகள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் உயிர் சேதாரம் ஏற்படும்.
ReplyDelete