.

Pages

Thursday, February 20, 2014

அதிரையில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு !

ஊர்காவல்படையில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். வயது 18ல்இருந்து 50க்குள் இருக்க வேண்டும். விளையாட்டு, சமூகசேவை, காராத்தே போன்றவைகளில் சிறப்பு தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை, மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இதில் சேரலாம் என்ற அடிப்படையில் இதற்கான நேர்முக தேர்வு இன்று காலை 10 மணி அளவில் அதிரை காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் காவல்துறை உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், ஊர்க்காவல் படை அதிகாரி மற்றும் ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டு தகுதியானவரை தேர்வு செய்தனர். இன்றைய நேர்முகத் தேர்வுக்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி, விளையாட்டு சான்றிதழ்களுடன் வந்து கலந்துகொண்டனர். இதில் தேர்வானவர்களுக்கு போலீசார் மூலம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.



1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.