மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் டிஜிட்டல் பேனர்களை அரசு அனுமதியோடு வைப்பதில் தப்பில்லை என்றாலும், சாலைகளை அடைத்துக் கொண்டு ரயில் பெட்டிகளை போல் தொடர்ச்சியாக பேனர்களை வைத்து இருப்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று மக்களை மிரட்டுவது போல் உள்ளது.
பேனர்களை வைப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வார். வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உள்பட்டு இருந்தால் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும். பேனர்களை 6 நாள்கள் வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
1. அதற்கான கட்டணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 200, நகராட்சிப் பகுதிகளில் ரூ 100, பேரூராட்சிப் பகுதிகளுக்கு ரூ 50 வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் திருப்பித்தரப்படாது.
2. 10 அடி அகலத்துக்கு குறைவாக உள்ள சாலைகளில் பேனர்களை வைக்கக்கூடாது.
3. 10 முதல் 14 அடிகள்வரை அகலம் உள்ள சாலைகளில் ஒருபுறமும், அதற்கு மேல் அகலமாக உள்ள சாலைகளில் இருபுறமும் பேனர்களை வைத்துக் கொள்ளலாம்.
4. கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நினைவுச் சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்கள் ஆகியவற்றில் பேனர்களை வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதேசமயம், வணிக ரீதியாக ஒருவரது இடத்தில் அல்லது நிலத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும்.
5. பேனர்கள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்தால், நகராட்சி நிர்வாகத் துறைக்கு மேல்முறையீடு செய்யலாம். அனுமதி மறுக்கப்பட்டதற்கான நோட்டீஸ் கிடைத்ததும் 13 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணமாக ரூ 500 செலுத்த வேண்டும்.
பெயருக்கு தான் காவல் துறை உங்கள் நண்பன் மற்றபடி பொது மக்கள் நலனுக்கு அல்ல. செங்க மலக்க்கன்னன் இப்போ இல்லையே , புதுசா வந்த அதிகாரியும் அப்படியோ!.
ReplyDeleteகடைகலை இடித்தது கட்அவுட் வைக்கவா ???????
ReplyDelete