.

Pages

Saturday, February 22, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள்-ஆசிரியர்கள் கெளரவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 65 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆண்டறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி வாசித்தார் அதில் பள்ளியின் சார்பில் கல்வியில் விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியர்கள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி ஆற்றிவரும் சமூக பணிகளையும், பள்ளி வரலாற்றில் சமீபத்திய சாதனையையும்  குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக பள்ளியின் தமிழ்துறை ஆசிரியர் அஜீமுதீன் நிகழ்த்திய வரவேற்புரையில் எம்.கே.என் ட்ரஸ்ட் நிர்வாக அலுவலர் நீதிபதி K. சம்பத் அனுப்பிய வாழ்த்து செய்தியை குறிப்பிட்டார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மறுதான்தளை அரசு மேல்நிலைபள்ளி முதுகலை ஆசிரியர் மகா. சுந்தர் சிந்தனை தரும் நகைச்சுவை சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி அசத்தினார். தமிழ்துறை ஆசிரியர் உமர் பாரூக் நிகழ்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். 

பள்ளியின் சார்பில் கல்வியில் - விளையாட்டில் சாதனை நிகழ்த்திய ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் A. அன்புமொழி அவர்களால் சிறப்பு பரிசுகள், பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

பணியிலிருந்து ஓய்வு பெரும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது மற்றும் விருப்ப ஓய்வு பெரும் முதுகலை ஆசிரியர் கணேசன் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்களால் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் எம்.கே.என் டிரஸ்ட் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








 

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. சாதனை மாணாக்கள் அனைவர்களுக்கும் எனது பாராட்டுக் களுடன் வாழ்த்துக்கள்.

    மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்தி நமது பள்ளிக்கு பெருமை சேர்த்தல் ஒவ்வொரு மாணாக்களின் கடமையாகும்.

    ReplyDelete
  3. Asalamu alaikkum....Na past year 2012-2013 kmbhss la than yennoda +2 mudichen...publicla 973 mrks yeduthu schl frst vanthen....my frnds halmi and ridhwan schl 2 and 3 yeduthanga.....nanga 3 memb orey street than (beach st).. intha year kmbhss annual dayla yengalukku prize irukkunu sonathala...naga ponom i mean i sent my parnts to receive my prize..and my frnds also sent his family membrs...yengalukku prize yethum important illa itha na yen solrenda na athan schl padichavan nala yenaku antha schl annual day pathi theriyumn..yeppothum avanga annual dayla past year schl 1,2,3 vanthavangalukelam yethavathu medal or sme thng newa irukkum ana nalla varaverpu irukkum..so athanala than famly membrs santhosa paduvanganu anuppunom...ana nanga yethir parkatha vahaila avanga yetho sinna pulla runng race la frst vantha oru thattayum certfcatum kodukura mathiri ingayum oru thatta oru chinna kopai ithailam koduthurukanga....unmailaye yenakku vekkama irukku...yenga mark vachi kooda avanga ipdi pannirukalam nu thonuthu...my requset is to pass this msg to kmbhss...yengalukku antha prize venam..avangaleye vachikira sollunga....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.