இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள் விளையாட்டுத்துறையில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் T. பிச்சையப்பா அவர்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு கல்லூரி மைதானத்தை சுற்றி வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்சிகள் அனைத்தையும் முனைவர் மேஜர் கணபதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்லது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.