.

Pages

Tuesday, February 25, 2014

பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் !

ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இன்று பகல் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், மாவட்ட கவுன்சிலர் கண்ணகி கல்யாண சுந்தரம், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்து கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக ஏரிபுறக்கரை பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 970 பயனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெறுவதற்காக பொதுமக்கள் திரண்டு காணப்பட்டனர். போலீசார் சிறிது நேரம் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.

 




5 comments:

  1. Admk ukku otdu potda varkalukku matdum thana? Appo agkalukku ellaiya....mm vachcheduvom aappu. Entha thearthalel

    ReplyDelete
  2. அதிரை வாசிகளுக்கெல்லாம் எப்ப?

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    எல்லோரும் மனிதர்கள், எல்லோருக்கும் தேவைகள் இருக்கின்றனது, மனித உரிமைகளை மதித்து எல்லோருக்கும் சென்றடைய செய்வது அரசின் கடமை.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிகொண்டிருக்கும் அரசு, மின்சார தட்டுப்பாடு போக்க நடவடிக்கை இல்லை - ஓட்டுக்காக இதனை கொடுக்கின்றனர் - மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்!. தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. அரசாங்கம் இலவசமாக எது கொடுத்தாலும் வாங்கதிர்கள். ஏன் என்றால் இலவசத்தை எதிர்பார்த்து, எதிர்பார்த்து, நாம் சோம்பேறிகளாக ஆகிவிட்டோம். நமக்கு கிடைக்கவேண்டியது இதோ இதுதான்.
    1) நமது குழந்தைகளுக்கு தரமான கல்விகளுடன், தொழில்கல்வி பாடத்தையும் இணைத்து பள்ளிகூடங்களில் நடத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்போம்.
    2) தொழிற்சாலையே அதிக அளவில் உருவாக்கி, படித்து பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்போம். மேற்கூறப்பட்டவை நமக்கு கிடைத்துவிட்டாலே நாம் அரசாங்கத்தையும், பிறரையும், எதற்கும் எதிர்பார்கவேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.