![]() |
| வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷமீல்அஹ்மது உயிரிழப்பைத் தொடர்ந்து ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் | கோப்புப் படம் |
பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூர் இளைஞர் ஷமீல்அஹ்மது கடந்த 26-ம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்தும், அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆம்பூரில் கடந்த மாதம் 27-ம் தேதி கலவரம் நடந்தது.
வாகனங்களுக்கு தீ வைப்பு
இதில் போலீஸார் உட்பட பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் சொத்துகளும் சூறையாடப்பட்டன. போக்குவரத்து வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து கலவரத்துக்கு காரணமான நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ஷமீல்அஹ்மது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆம்பூர் கலவரத் துக்கு முக்கிய காரணம் என்ன? ஷமீல்அஹ்மது உயிரிழப்புதான் கலவரத்துக்கு காரணமா? கலவரத் துக்குப் பின்னணியில் இருந்தது யார்? என்பது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஷமீல் அஹ்மது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஷமீல் அஹ்மது வேலை பார்த்த நிறுவனம், காணாமல் போனதாகக் கூறப்படும் பவித்ரா குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர்.
8 பேர் கைது
இதற்கிடையே, கலவரத்துக்கு காரணமான ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் (23), இக்பால் (22), இம்ரான் (23), அனு (24) உட்பட 8 பேரை ஆம்பூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.
சிபிசிஐடி போலீஸார் விசாரணை
ஷமீல் அஹ்மது மரணம் தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் 5 பேரிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நேற்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பள்ளிகொண்டா காவல் நிலைய பணியில் இருந்த 5 போலீஸாரிடமும் எஸ்பி விசாரணை நடத்தினார். விரைவில் காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.
நன்றி : தமிழ் ஹிந்து
July 3, 2015.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.