.

Pages

Wednesday, July 29, 2015

செடியன்குளம்: ஒர் அவசர நினைவூட்டல் !

நம்புங்கள், இது தான் இன்றைய செடியன் குட்டை, ஸாரி செடியன் குளம்.

சென்ற வருடம் அல்லாஹ்வின் அருள்மழையும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் உட்பட அப்பகுதியினரின் தீவிர முயற்சியில் கொண்டு வரப்பட்ட நீரால் செடியன் குளத்திற்கு நீர் வந்ததடைந்தது. குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள வெளியேற்றுப்பாதை சரியாக அடைக்கப்படாததால் தொடர்ந்து கசிந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறி இன்று ஓர் சாக்கடை குட்டை அளவிற்கு காட்சியளிக்கின்றது என்றாலும் இப்போதும் தினமும் நூற்றுக்கணக்காணோர் பயடைனந்து வருகின்றனர் என்ற நிதர்சனம் நிலவும் வறட்சியை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லா அனுதினக் காட்சிகள்.

சென்ற வருடம் குளத்து நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தபோதே நாம் பலமுறை நடவடிக்கை வேண்டி கோரிக்கை வைத்தோம் அன்று செப்பனிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மக்களுக்கு இதைவிட கூடுதலான நீர் தேங்கியிருந்து அவர்களின் மனதையும் உடலையும் நனைத்திருக்கும் அதன் நன்றிப்பெருக்கால் உங்களுக்கும் அல்லாஹ்விடம் மிகுந்த நற்கூலி கிடைத்திருக்கக்கூடும்.

சரி நடந்ததை விடுவோம் இனி நடக்கவிருப்பதை நன்மையாக்க முயல்வோம்

தற்போது நமதூரிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றது இன்ஷா அல்லாஹ் செடியன் குளம் நிறையுமளவுக்கு அல்லாஹ் இந்த வருடமும் மழையை இறக்கலாம் என்பதால் போர்க்கால நடவடிக்கையாக செடியன்குளத்தின் நீர் வெளியேற்றும் கிணற்றுப்பாதையை உடனடியாக செப்பனிட்டு இந்த வருட மழைநீரை தேக்கி வைத்து மக்களுக்கு நீண்டநாள் கோடையிலும் பயன் கிடைக்க செய்ய வேண்டுகிறோம்.

பிலால் நகர் வருடாவருடம் வெள்ளத்தால் பாதித்து வரும் நிலையில், செடியன் குளத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அதன் வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றினாலேயே அமைதியாக ஓடிவிடும். அதற்கு மாற்றமாக இப்படி அடுப்படி ஊதாங்குழலை பதித்து பொங்கிப் பெருகும் வெள்ளநீரை கொண்டு செல்ல நினைத்தால் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படப்போவது பிலால் நகர் தான் என்பதால் உடனடியாக .இந்த ஊதாங்குழல் சைஸ் பைப்புகளை அகற்றிவிட்டு வடிகால் வாய்க்காலை சுத்தப்படுத்தும் வழியை பார்ப்பதே சிறந்தது என சம்பந்தப்பட்டோருக்கு சொல்லி வைக்கின்றோம்.

அதிரை அமீன்
 

2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    வருமுன் காப்போம் என்பது போல் அனைவரும் ஒன்று சேர்ந்து அவசர கால நடவடிக்கையாக இதில் முழு முயற்சி எடுக்க வேண்டும்
    பதிவுக்கு நன்றி
    AMS குலாம் முகமது

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    வருமுன் காப்போம் என்பது போல் அனைவரும் ஒன்று சேர்ந்து அவசர கால நடவடிக்கையாக இதில் முழு முயற்சி எடுக்க வேண்டும்
    பதிவுக்கு நன்றி
    AMS குலாம் முகமது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.