.

Pages

Friday, July 24, 2015

அட! டா!! இந்தப் பாதையையும் விட்டு வைக்கவில்லையா?


அதிரையில் உள்ள தெருக்களில் ஒன்று தான் புதுமனைத் தெரு, இதை கிழக்கு மேற்காக நான்கு அல்லது ஐந்து லைனாக பிரிக்கலாம்.

இதில் நேராக மேற்கே சித்தீக் பள்ளியைக் கடந்து போனால் கடைசியில் வலது பக்கம் திரும்பினால் மறைக்கா குளம் முனங்கு வரும், இந்தப் பகுதி கடந்த ராத்திரி பெய்த மழையினால் சேரும் சகதியுமாக இருக்குது, கடந்து போவதற்கு தோதுவாக இல்லை. damage

இதற்க்கு முன் சித்தீக் பள்ளிக்கு எதிர்த்தாற்போல் ஒரு குறுக்கு பாதை இருக்கும், இதுவும் தற்போது கடந்து போக முடியாத அளவுக்கு இருக்கின்றது. சிரமப்பட்டு நடந்து கடந்து போகலாம், ஆனால் வாகனங்களில் கடந்து போகமுடியாது.  damage.

இதற்க்கு முன் ஒரு பாதை இருக்கும், இதில் கடந்து போகலாம், ஆனால் கரடு முரடாக இருக்கும், ராத்திரி வேளையில் சரி வராது.

இதற்க்கு முன் ஒரு பாதை இருக்கும், அதுதான் செய்குணா வீட்டு சந்துப் பெரிய பாதை என்று சொல்வார்கள்.

இந்தப் பாதையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம், கடந்து மூன்றாது கட்டத்தில் இப்படி மணல் குவியலை கொட்டி இருப்பது நியாமா?



இந்தப் புகைப்படம் 24/07/2015-வெள்ளிக்கிழமை பின்னேரம் 08.00pmக்கு எடுக்கப்பட்டது.

நீங்களே சொல்லுங்க! இது எந்த வகையில் நியாயம்?

மணல் வியாபாரி, அவன் ஒரு வியாபாரி, அவனுக்கு தேவை காசு, எந்த இடத்தில் கொட்டினாலும் அவனுக்கு கவலை இல்லை, அவனுக்கு தேவை காசு, காசு வந்தால் போதும்.

உரிமையாளர் எங்கே சென்றார்?

இதுபோல் நமதூரில் பல இடங்களில் பல அரங்கேற்றங்கள், அரங்கேறி வருகின்றது. யாரு கேட்பது?

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


1 comment:

  1. கேள்வி பிறந்தது இங்கே. பதில் பிறப்பது எங்கே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.