இதில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் செக்கடிமேடு பகுதியை சேர்ந்த நண்பர்கள் வழக்கம் போல் பெருநாள் அன்று ஒன்றுகூடுவார்கள். இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு பிறகு புதிதாக புனரமைக்கப்பட்ட செக்கடிகுளம் நடைமேடை பகுதியில் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
சந்திப்பு குறித்து அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் நம்மிடம் கூறுகையில்...
பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியிருக்கும் செக்கடிமேடு நண்பர்கள் பெருநாள் தினமான இன்று ஒன்று கூடினோம். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சில நண்பர்களை நாங்கள் சந்திதத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு வருடந்தோறும் தொடர்ந்து நடைபெற இறைவன் அருளபுரிய வேண்டும். இன்றைய சந்திப்பில் ஊர் பொதுநலன் சார்ந்த சில விஷயங்கள் குறித்து பேசினோம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என்றார்.
Eid mubarak
ReplyDeleteமண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் .
ReplyDeleteநோன்புப் பெருநாளில் இப்படி ஒரு இடத்தில் நண்பர்கள் ஒன்று கூடுவது ஒரு சிறப்பு. அதிலும் செக்கடி மோடு நண்பர்கள் புதிதாக உறுவாக்கப்பட்ட நடைபாதை பூங்காவை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ReplyDeleteஅந்த வகையில் இந்த நடைபாதைக்கு இது தலை பெருநாள் அல்லவா?
இந்த நடைபாதையை உறுவாக்கியவர்கள் சிறப்புக்குரியவர்கள் அல்லாஹ் அவர்களின் சேவையை பொருந்திக் கொள்வானாக