.

Pages

Saturday, July 18, 2015

செக்கடிமேடு நண்பர்களின் பெருநாள் சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் இன்று பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தங்களின் உறவினர், நண்பர்களுக்கு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் செக்கடிமேடு பகுதியை சேர்ந்த நண்பர்கள் வழக்கம் போல் பெருநாள் அன்று ஒன்றுகூடுவார்கள். இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு பிறகு புதிதாக புனரமைக்கப்பட்ட செக்கடிகுளம் நடைமேடை பகுதியில் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

சந்திப்பு குறித்து அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் நம்மிடம் கூறுகையில்...
பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியிருக்கும் செக்கடிமேடு நண்பர்கள் பெருநாள் தினமான இன்று ஒன்று கூடினோம். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சில நண்பர்களை நாங்கள் சந்திதத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு வருடந்தோறும் தொடர்ந்து நடைபெற இறைவன் அருளபுரிய வேண்டும். இன்றைய சந்திப்பில் ஊர் பொதுநலன் சார்ந்த சில விஷயங்கள் குறித்து பேசினோம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என்றார்.
 
 
 

3 comments:

  1. மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் .

    ReplyDelete
  2. நோன்புப் பெருநாளில் இப்படி ஒரு இடத்தில் நண்பர்கள் ஒன்று கூடுவது ஒரு சிறப்பு. அதிலும் செக்கடி மோடு நண்பர்கள் புதிதாக உறுவாக்கப்பட்ட நடைபாதை பூங்காவை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

    அந்த வகையில் இந்த நடைபாதைக்கு இது தலை பெருநாள் அல்லவா?

    இந்த நடைபாதையை உறுவாக்கியவர்கள் சிறப்புக்குரியவர்கள் அல்லாஹ் அவர்களின் சேவையை பொருந்திக் கொள்வானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.