.

Pages

Monday, July 27, 2015

தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு, நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிகிறது.

அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 7 நாட்கள் நாடுதழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

3 comments:

  1. இளைஞர்களின் கலங்கரை விளக்கே இந்தியாவின் விடி வெள்ளியே உன்னை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்களுக்கு வழி காட்டிய உன்னை வானுலகம் அழைத்தது ஏன் ? நீ இல்லாத இந்தியா எப்படி சாத்தியம் ? அப்துல் கலாம் இந்தியாவை வல்லரசாக்க கனவு கண்ட மாமேதை. கனவு காண மாணவர்களை தூண்டியவர். மக்களை விட்டு விலகி வாழ்ந்த குடியரசு தலைவர்களை கண்ட இந்தியாவிற்கு மக்களோடு இணைந்து வாழும் அதிசயத்தை நடத்தி காட்டிய குடியரசுத் தலைவர். அவரது சிந்தனைகள் நாட்டு முன்னேற்றத்திற்கு என்றும் அவசியம் . இந்தியாவில் உள்ள அனைவரும் கண்ணீர் சிந்தி அவரது இழப்பை தங்களது குடும்ப இழப்பாக நினைக்கும் அளவு மக்களோடு கலந்து விட்டவர் .

    ReplyDelete
  2. Govt. Did not declare holiday. Medias confused this news.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.