தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் இன்று (13.07.2015) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு திட்ட திருமண உதவித் தொகை 3 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரமும், இறப்பு நிவாரணத் தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500மும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து சுய தொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் உதவி தொகைகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் தீருதவி தொகைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தொழிலாளர் நலத்துறை சார்பாக தொழிலாளர் நல வாரிய மூலம் 30 உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய ஆணையினையும், சமூகநலத்துறையின் மூலம் 17 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
34 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். ஆக மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 79 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட தொழிலாளர்கள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொ) திரு.சுகுமாறன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.மனோகரன், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் திருமதி. அனுசியா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு திட்ட திருமண உதவித் தொகை 3 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரமும், இறப்பு நிவாரணத் தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500மும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து சுய தொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் உதவி தொகைகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் தீருதவி தொகைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தொழிலாளர் நலத்துறை சார்பாக தொழிலாளர் நல வாரிய மூலம் 30 உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய ஆணையினையும், சமூகநலத்துறையின் மூலம் 17 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
34 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். ஆக மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 79 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட தொழிலாளர்கள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொ) திரு.சுகுமாறன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.மனோகரன், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் திருமதி. அனுசியா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.