அதிரையின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வேப்ப மரங்களின் இலைகள் உதிர்ந்து மரத்தின் அடியில் பரவிக்கிடந்தது. இந்த திடீர் இலை உதிர்வு பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்தது. வழக்கமாக பட்டுப்போன இலைகள், பூக்கள் கீழே உதிர்ந்து வரும். இதற்கு மாற்றமாக மரத்திலிருந்து பச்சை இலைகள் உதிர்வது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் இலைகள் மரங்களின் அடியில் மலைபோல் குவிந்து காணப்படுவதால் அதிரை பகுதிகளில் ரோந்தில் வரும் பேரூராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு இவற்றை அள்ளிச்செல்வதில் இன்னும் சில தினங்களுக்கு சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது. எனினும் வேப்ப இலைகள் சாலைகளில் பரவிக்கிடக்கும் காட்சி பார்ப்பதற்கு பச்சை பசேல் என ரம்மியமாக அமைந்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரியிடம் விசாரித்த வகையில், கால நிலை மாற்றத்தால் மரத்தின் இலைகள் உதிர்கின்றன. இலைகள் உதிர்ந்த பின் மீண்டும் புதிய இலைகள் முளைத்துவிடும். தொடர் மழை பெய்துவிட்டு திடீரென வெயில் அடிப்பதால் இலைகள் உதிர்கின்றன மற்றபடி பயப்பட தேவையில்லை' என்றார்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரியிடம் விசாரித்த வகையில், கால நிலை மாற்றத்தால் மரத்தின் இலைகள் உதிர்கின்றன. இலைகள் உதிர்ந்த பின் மீண்டும் புதிய இலைகள் முளைத்துவிடும். தொடர் மழை பெய்துவிட்டு திடீரென வெயில் அடிப்பதால் இலைகள் உதிர்கின்றன மற்றபடி பயப்பட தேவையில்லை' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.