.

Pages

Tuesday, December 29, 2015

மரைக்கா குளம் செய்த பாவமென்ன ?

சமீபத்தில் அடித்துப் பெய்த மழையில் அதிரையிலுள்ள பெரும்பாலான குளங்களில் நீர்வரத்து வந்தது. ஒரு சில குளங்களுக்கு பம்பிங் முறையில் அதிரை பேருராட்சி தலைவரின் முயற்சியால் நீர் நிரப்பப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அதிரையில் பெண்களுக்கென்று மட்டும் பிரத்தியேகமாக உள்ள மரைக்காகுளம் மட்டும் மழையாலும் நிறையவில்லை, பம்பிங் முயற்சியும் செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் களமிறங்கவில்லை. எந்தக் கட்சிக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட ஜமாத்தும் புறக்கணித்துவிட்டது.

இப்படி அனைவரும் கண்டுகொள்ளாதிருக்கும் மரைக்காகுளத்தை நிறைக்க வரும் நாட்களிலாவது தெருசார் அமைப்புக்களாவது முன்வர வேண்டும்.

2 comments:

  1. மறைக்கா குளத்தைப் பெண்களுக்கென்றே உள்ளதென்று, இப்போது சொல்ல முடியாது. ஒரு காலத்தில், இக்குளம் ஊருக்கு வெளியே இருந்தது. ஆனால் இப்போது குளத்தைச் சுற்றி வீடுகளும் போக்குவரத்துகளும் கூடிவிட்டன. எனவே, குளத்தைச் சுற்றி வேலி அடைத்தால், அல்லது வலைக்கம்பி fence அமைத்து மூடினாலன்றி, அது பெண்கள் குளிக்க லாயக்கற்றதாக இருக்கும். முஹல்லாவாசிகளும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் கவனிக்க வேண்டியது.

    ReplyDelete
  2. குளத்தில் தண்ணீர் நிரப்பி செக்கடிக்குளம் அருகில் இருப்பதால் அதை ஆண்களுக்காகவும் காக்கா அவர்கள் ஆலோசனை தந்திருப்பதுபோல் வேலி, அடைப்பு அமைத்து மறைக்கா குளத்தை Exclusively பெண்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடலாம். குளங்களில் குளியல் இருந்தால் தெருக்களில் சாக்கடை ஓடுவது குறையும். கொசு உற்பத்தியும் குறையும். ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் அந்த வட்டாரத்தில் உள்ள வசதியுள்ளவர்கள் இந்தப் பணியை முன்னெடுக்கலாம்.

    ஒரு சந்தேகம். தெரிந்தவர்கள் சொல்லலாம். குளங்களுக்கு பம்ப் செய்து நீர் நிரப்பும் திட்டத்தில் எத்தனை குளங்களுக்கு என்று நிதி ஒதுக்கபட்டது? அதில் மறைக்கா குளமும் ஒன்றா? அப்படி இருந்தால் ஏன் மறைக்கா குளம் நிரம்பவில்லை?
    நிதி பற்றாக்குறையாகிவிட்டதா? அப்படியானால் மேலும் நிதி ஒதுக்க வழி இருக்கிறதா?

    எங்கோ இருக்கும் எனக்கு மறைக்கா குளம் பற்றி ஏன் அடிக்கடி அக்கறை என்று சில நண்பர்களுக்கு சந்தேகம். மறைக்காமல் சொல்வதென்றால் - எனக்கு அங்கு இடம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் வீடு கட்ட இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ். அத்துடன் அந்தப் பகுதியில் சுற்றிலும் எனது இரத்த உறவுகளும் இருக்கின்றன; ஆருயிர் நண்பர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட சமூக ஆர்வலருக்குள்ள கடமை என்றும் கருதுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.