இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் ஏர்வாடியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஏர்வாடி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து 3–வது நாளாக இன்றும் பஸ்கள் அந்த வழியாக செல்லவில்லை.
இந்த நிலையில் கொலையான காஜாமைதீன் உடல் பாளை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், காஜாமைதீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3–வது நாளாக இன்றும் காஜாமைதீன் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்டிபிஐ, பி.எஃப்.ஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் ஏர்வாடி பஜாரில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காஜாமைதீன் உறவினர்களிடமும், இஸ்லாமிய அமைப்பினரிடமும் நெல்லை போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காஜாமைதீன் உடலை வாங்க அவர் வலியுறுத்தினார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை ஏர்வாடி பஜாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்டிபிஐ, பி.எஃப்.ஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏர்வாடியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொத்தையடியை சேர்ந்த பெண் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி இந்து அமைப்பினர் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று விடுவிக்கப்படலாம் என செய்தி பரவியது.
பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ள இந்த கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் யார்? என்ற மர்மம் விலகவில்லை. பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்பதும் தெளிவாகவில்லை.
இதற்கிடையில் காஜாமைதீன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவது போலீசாருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி:மாலை மலர்
படங்கள்: முகநூல்
இந்த ஒற்றுமை அல்லாஹ் எப்பொழும் நாடுவனாக துவா செய்யவும்
ReplyDeleteஇந்த ஒற்றுமை அல்லாஹ் எப்பொழும் நாடுவனாக துவா செய்யவும்
ReplyDeleteஇந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லா அமைப்பினரையும் குறிப்பிட்ட நீங்கள் த த ஜ வை ஏன் குறிப்பிடவில்லை?
ReplyDelete