.

Pages

Sunday, December 20, 2015

மலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்கம் !

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர்  விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் இன்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக் முதல் விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து  பணியாற்றுவார்கள். முக்கியமாக ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது  லங்காவி நகருக்கு மட்டும் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மலைசியாவின் மற்ற நகரங்களுக்கும் ரயானி ஏர் விமான சேவையை அளிக்கவுள்ளது.

இந்த நிறுவனத்தை தோற்றுவித்த ரவி அழகேந்திரன் கூறுகையில், '' முஸ்லிம் பயணிகளை கவரும் வகையில்தான் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் அவர்கள் விரும்பும் வகையில் ஹிஜாப், ஹலால் உணவு, மது நீக்கம் போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளோம். பன்றிகறி பரிமாறப்பட மாட்டாது. விமானம் புறப்படுவதற்கு முன், இஸ்லாமிய முறையிலான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.

இதனை பாகுபாடான விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. மற்ற விமான நிறுவனங்களின் சேவையில், முஸ்லிம் பயணிகள்  சில சவுரிய குறைபாடுகள் ஏற்படலாம். அதனை ரயானி ஏர் நிவர்த்தி செய்யும். தற்போது 350 ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.  இதில் 8 பேர் பைலட்டுகள். 50 பணிப் பெண்களும் உள்ளனர்.

இதில் இஸ்லாமிய பெண்களாக இருந்தால், அவர்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிந்து பணி புரிவார்கள். மற்றவர்கள் நேர்த்தியான ஆடை அணிந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளோம். அடுத்து கோட்டா கின்னப்புலு, குட்சிங் நகரங்களுக்கு சேவை  தொடங்குகிறோர். விரைவில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் ரயானி ஏர் விமான சேவை அளிக்கவுள்ளது'' என்றார்.

முஸ்லிம் நாடானா மலேசியாவில் இந்த வகையிலான விமான சேவையை தொடங்கியுள்ள முதல் விமான நிறுவனம் ரயானி ஏர்தான். எனவே  மிகப் பெரிய வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

நன்றி:விகடன்

3 comments:

  1. எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய எல்லா நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாகவும் ஆமீன்.

    இதைப்போல் மற்ற நாடுகளும் முஸ்லிம் பயணிகளுக்காகவே இந்த மாதிரியான சேவைகளை தொடங்கட்டும்.

    ReplyDelete
  2. எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய எல்லா நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாகவும் ஆமீன்.

    இதைப்போல் மற்ற நாடுகளும் முஸ்லிம் பயணிகளுக்காகவே இந்த மாதிரியான சேவைகளை தொடங்கட்டும்.

    ReplyDelete
  3. எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய எல்லா நல்ல எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாகவும் ஆமீன்.

    இதைப்போல் மற்ற நாடுகளும் முஸ்லிம் பயணிகளுக்காகவே இந்த மாதிரியான சேவைகளை தொடங்கட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.