இதில் இந்த பகுதியை சேர்ந்த தம்பு ரஹ்மத்துல்லா தலைமையில் 20 பேர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். திமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
திமுக அதிரை பேரூர் இளைஞர் அணி செயலளார் நியாஸ் அஹமது திமுக கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக திமுக அதிரை பேரூர் இணை செயலாளர் தில்லை நாதன் உரை நிகழ்த்தினார். விழா முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள், சாதிக் மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
'அம்மா முழு உடல் பரிசோதனை' திட்டம், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது அதற்குள் கட்சி மாறிவிட்டீர்களே! பெயரைச் சொல்லி நல்லா பரிசோதனை பண்ணிக்கொள்ளலாமே! தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்.. இருந்தாலும் நம்மலுடைய அடிமை புத்தியிலிருந்து எப்போது மீள்வோம்? கொடி பிடிக்கவும் கோசம் போடவும் போஸ்டர் ஒட்டவும் இதனால் நம் சமுதாயத்திற்கு பலன் உண்டா? அவர்கள் சிம்மாசனத்தில் உட்கார நாம நாய் போல் வேலை செய்யணும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும்? தேர்தலும்.... தேர்வும் மக்களை பாதிக்க செய்கிறது.
ReplyDelete