.

Pages

Tuesday, March 1, 2016

பிலால் நகரில் அதிமுகவிலிருந்து 20 பேர் விலகி திமுகவில் இணைந்தனர் !

திமுக மாநில பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று காலை அதிரை பேரூர் திமுக சார்பில் பிலால் நகரில் கொடிஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் இந்த பகுதியை சேர்ந்த தம்பு ரஹ்மத்துல்லா தலைமையில் 20 பேர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். திமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

திமுக அதிரை பேரூர் இளைஞர் அணி செயலளார் நியாஸ் அஹமது திமுக கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக திமுக அதிரை பேரூர் இணை செயலாளர் தில்லை நாதன் உரை நிகழ்த்தினார். விழா முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள், சாதிக் மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. 'அம்மா முழு உடல் பரிசோதனை' திட்டம், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது அதற்குள் கட்சி மாறிவிட்டீர்களே! பெயரைச் சொல்லி நல்லா பரிசோதனை பண்ணிக்கொள்ளலாமே! தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்.. இருந்தாலும் நம்மலுடைய அடிமை புத்தியிலிருந்து எப்போது மீள்வோம்? கொடி பிடிக்கவும் கோசம் போடவும் போஸ்டர் ஒட்டவும் இதனால் நம் சமுதாயத்திற்கு பலன் உண்டா? அவர்கள் சிம்மாசனத்தில் உட்கார நாம நாய் போல் வேலை செய்யணும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும்? தேர்தலும்.... தேர்வும் மக்களை பாதிக்க செய்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.