.

Pages

Tuesday, March 1, 2016

சவூதி ரியாத்தில் சமூக நல அமைப்பின் மகத்தான மனிதநேய பணி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் ஷீலாரஞ்சனி (மனைவி) ஆஷா பிரியதர்ஷினி (மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வேலை பார்த்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டபட்டு வந்தவரை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று  ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நலத்துறை நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

தொடர் முயற்சியின் பலனாய் 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட SDPI தலைவருக்கு தெரிவித்தன் அடிப்படையில் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார்.

பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

சவூதி அரேபியாவில் செயல்பட்டு வரும் சமூக நல அமைப்பான இந்தியன் சோஷியல் ஃபோரம் பல்வேறு சமூக நல பணிகளை SDPI கட்சியின் சமூக நல துறையின் வழிகாட்டலை மேற்கொண்டு சிறப்பாக செயலாற்றி இந்தியர்களின் துயர் துடைப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.