.

Pages

Sunday, May 8, 2016

போடுவோம் வோட்டு - வாங்க மாட்டோம் நோட்டு: வாக்காளர் உறுதி மொழி ஏற்பு !

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி 10.05.2016 அன்று நேர்மையான தேர்தல் விழிப்புணர்வு  1 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

வாக்காளராகிய நான் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.  நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும், மேலும் தேர்தலில் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி, பணம் பொருள் ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்கு அளிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

வாக்களிப்பது எனது ஜனநாயக உரிமை மற்றும் கடமை என்பதையும்,
என்னுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதையும்
வாக்கிற்காக பணமோ, பொருளோ பெறுவதும் குற்றம் என்பதையும் நான் அறிவேன்.  எனவே பணமோ, பொருளோ அல்லது வேறு எந்தவித தூண்டுதலோ இன்றி 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க நான் முழு மனதுடன் உறுதியேற்கிறேன்.    மேலும், பணமோ, பொருளோ வழங்கும் நபர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், தேர்தல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டேன் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை நிராகரிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். "போடுவோம் ஓட்டு - வாங்க மாட்டோம் நோட்டு" என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்கவுள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட மன்றத் தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்திட உறுதிமொழி ஏற்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் 10.05.2016 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு அவரவர்கள் இருக்கும் பகுதிகளில், பணியாற்றும் நிறுவனங்களில் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுத்துக் கொண்ட விபரத்தை புகைப்படத்துடன் 8300023880 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும், https://www.facebook.com/Thanjavur-Election-2016-113884062354718/ என்ற பேஸ்புக்கிலும், தேர்தல் பிரிவு இமெயில் deo_thanjavur@yahoo.co.in என்ற இணைய தளத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tn.elections.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.